நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? டாக்டர் பெரியார்தாசன்

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பில் “அப்துல்லாஹ்” என பெயர் மாற்றம் செய்துக்கொண்ட டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், 14.03.2010 அன்று இரவு 8.45 முதல் 9.30 வரை உரை நிகழ்த்தினார். சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர், ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும், முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார். தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார். “அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும் இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும், டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்
ஸனாயியா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி இணைந்து ஒரே நாளில் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, ஜித்தாவின் தொழில்பேட்டையாக அறியப்பட்ட ஸனாயியா அழைப்பு மையத்தில் அதன் மேலாளர் ஷேக் “ஃபுவாத் பின் ஹாஸிம் அல் கவ்ஸர்” அவர்களின் முன்னிலையில் நடந்தது.

நிர்வாகத்திறன் பயிற்சி பட்டறை மற்றும் தமிழ் மன்ற சிறப்பு நிகழ்ச்சிகளினால் டாக்டரை அறிந்தவர்களும், முஸ்லிம், இந்து கிருத்துவ சகோதரர்களும் சொற்பொழிவை கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் சாதிக் சிக்கந்தர் அவர்கள் தலைமை தாங்கினார். அழைப்பு மையத்தின் தமிழ் துறை பொறுப்பாளர் ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களின் இறுதி சிற்றுரையோடு நிகழ்ச்சி இனிதே நடந்து முடிந்தது.

ஷேக் K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்கள் பேசும்போது, “டாக்டர் அவர்களுடன் சேர்ந்து உம்ரா செய்யும் வாய்ப்பு நேற்று கிடைத்ததாகவும், அப்போது ஜித்தாவில் உள்ளவர்களுக்கு ‘நீங்கள் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்’ என்பதை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்று, டாக்டர் அவர்கள் தனது ரியாத் பயணத்தை ஒத்திவைத்ததாகவும் குறிப்பிட்டார். பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

டாக்டரின் சொற்பொழிவை விரைவில் பார்க்கலாம் (இறைவன் நாடினால்..).


பாரதிராஜா என் ரசிகர்! வைரமுத்து என் மாணவர்! அவர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்து சொல்வேன்

ரமழான் புண்ணியங்களின் பூக்காலம்

بسم الله الرحمن الرحيم

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான்.

ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு
முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

நோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2:183)

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
யார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் காஃபிராகி
விடுவார்.இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேடுமாறு கூறவேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையெனில் நம்பிக்கை கொண்ட பின் (முர்தத்)இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவனைக்கொன்றிட வேண்டும். பிறகு அவனை குளிப்பாட்டவோ,கஃபனிடவோ,ஜனாஸா தொழுகை நடத்தவோ,
முஸ்லீம்களின் கப்றுஸ்தானத்தில் அடக்கம் செய்யவோ கூடாது.

  • ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.
  •  நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.

ரமழான் மாதத்தின் சிறப்புகள்
  • மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அல்குர்ஆன் அருளப்பட்டமாதம். (2:185)
  • ரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் 'நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக்கொள்ளுங்கள்!' என்று உரக்கச்சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா)

  • ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)

  • ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத்தவிர என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : முஸ்லிம்)

  • யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • யார் (உறுதியான)நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • எவர் ரமழானில் உம்ரா செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜைநிறைவேற்றியவர் போன்றாவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • ரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.

நோன்பின் சிறப்புகள்

  • நோன்பின் பரிந்துரை : நோன்பும், அல்குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும், நோன்பு கூறும் என் இறைவா! நான் இந்த அடியானை உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துவைத்திருந்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! குர்ஆன் சொல்லும் : நான் இவனை இரவில் தூங்க விடாமல் தடுத்திருந்தேன். எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! இவ்வாறு இவ்விரண்டும் சிபாரிசு செய்யும். (ஆதாரம் : அஹ்மத்,தபரானி,ஹாகிம்)
  • நோன்பு ஒரு கேடயமாகும். அதனைக்கொண்டு மனிதன் நரகத்திலிந்து தன்னைத்தற்காத்துக் கொள்கிறான்.(ஆதாரம் : அஹ்மத்)

  • சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு 'அர்ரய்யான்'; என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத்தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

  • நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும்பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
  • எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்ப்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை எழுபது ஆண்டு தொலைவுக்கு தூரப்படுத்துவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி,முஸ்லிம்)

ரமழான் நோன்பு எப்போது ஆரம்பம்?

பிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கலாம். அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறை பார்கப்பட்டதாக உறுதியான தகவல் ஒரு நபரின் மூலம் கிடைத்தாலும் ரமழான் நோன்பின் வருகையை உறுதி செய்யலாம். பிறைபார்க்க முடியாமல் மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து ரமழானின் நோன்பை நோற்கலாம். இம்மூன்று வழி முறைக்கும் குர்ஆன் சுன்னாவில் தெளிவான, உறுதிமிக்க ஆதாரங்கள் உண்டு.

ஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்க்கக்கூடாது. ரமழான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்க்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்ப்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)

ரமழான் நோன்பு கடமையானவர்கள்

  • காஃபிர்கள், வேண்டுமென்றே தொழுகையை விட்டவர்கள் மீது நோன்பு கடமையாகாது. தொழுகையை யார் விட்டானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம் : அஹ்மத்)
  • பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்க்குமாறு ஏவலாம். ஸலஃபுகளிடத்தில் இதற்கு நல்ல முன்னுதாரணங்கள் உண்டு.
  • பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
  • முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
  • சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால், அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்ப்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டிய அவசியமில்லை. விடுபட்ட நோன்பிற்காக ஒரு நோன்பிற்கு ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
  • மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்க்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
  • நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற  ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோறக்க வேண்டும்.
  • நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு பதிலாக அவருடைய பொறுப்பாளர் (வாரிசோ, உறவினரோ)நோன்பு நோற்க்க வேண்டும்.
  • பொறுப்பாளர் யாரும் இல்லையெனில் அல்லது பொறுப்பாளர் நோன்பு நோற்க்க விரும்பவில்லையெனில் மரணித்தவருக்கு எத்தனை நோன்புகள் கடமையாக இருந்ததோ அத்தனை நோன்புகளுக்கும் ஒரு நாளைக்கு ஒரு ஏழை வீதம் உணவு வழங்க வேண்டும்.

நோன்பை முறிக்கும் செயல்கள்

  • சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.
  • முத்தமிடுதல், அணைத்தல்,உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
  • உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
  • மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும். வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய பரிகாரம்
  • வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய குற்ற பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்) நோன்பாளிகளின் கவனத்திற்கு...
  • நாம் செய்யும் எல்லா இபாதத்துகளுக்கும் நிய்யத் அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் ஃபஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்க வேண்டும்.(நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல மனதால் எண்ணுவது)
  • பல்துலக்குவது, சிறு காயங்கள், விபத்துக்கள் மூலம் ரத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ வெளியாகுதல், வாந்தி எடுத்தல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பிற்கு மருந்து செலுத்துதல், கண் காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குள் சென்று விடாத வகையில் உணவை ருசிபார்த்தல், போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • மறதியாக உண்பதினாலோ பருகுவதினாலோ நோன்பு முறிந்து விடாது.
  • நகம், முடிவெட்டுதல், நோன்பின் பகல் வேளையில் குளித்தல், சுரும்மா இடுதல், வாசனை திரவியங்கள் பூசுதல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
  • எல்லை தாண்டாத அளவிற்கு சுய கட்டுபாடு உள்ளவர் மனைவியை அணைப்பதும், முத்தமிடுவதும் கூடும்.
  • குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோறக்கலாம் ஆனால் ஃபஜ்ரு தொழுகைக்கு குளிப்பது கட்டாயம்.
ரமழான் மாதத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்

  • தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. இக்கடமையை உரிய நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
  • நோன்பு நோற்பவர்கள் ஸஹர் உணவு உண்பதும், அதை பிற்படுத்துவதும், இஃப்தாரை முற்படுத்துவதும் இவ்விரண்டு உணவு வேளைகளில் பேரீத்தம் பழம் உண்பதும் விரும்பத்தக்க ஒழுங்கு முறைகளில் உள்ளதாகும்.
  • யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி) இதுவும் ரமழானில் நமக்கு நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும்.
  • சுன்னத், நஃபிலான வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • பாவங்களிலிருந்து விலகி இருப்பதுடன் நம்முடைய குணத்தை சீராக்கி இறையச்சத்தை அதிகரிக்க வேண்டும்.
  • ரமழான் மாதம் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் எனவே குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்க முயற்சிப்பது, ஆயத்துகள் அல்லது சூராக்களை மனனம் செய்வது, குர்ஆன் ஓதத்தெரியாதவர்கள் நன்றாக ஓதத்தெரிந்தவர்களிடம் ஓதக்கற்றுக்கொள்வது, திருக்குர்ஆனின் பொருளை உணர்ந்து சிந்திப்பதுடன் அதன் விளக்கங்களை தெரிய முயற்சிப்பது, குர்ஆன், சுன்னாவை நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறை படுத்த பயிற்சி எடுத்துக்கொள்வது. இதுபோன்ற நல்ல அமல்களில் ஈடுபடவேண்டும்.
  • மூவருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அம்மூவரில் ஒருவர் நோன்பாளி எனவே ரமழானில் தினமும் அதிகமாக துஆச்செய்ய வேண்டும். இந்த துஆக்கள் குறிப்பாக ஸஹருடைய நேரத்திலும், இஃப்தாருடைய நேரத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இருத்தல் வேண்டும். நாம் செய்யும் துஆக்களின் வாசகங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றவையாக இருந்தால் மிகச் சிறந்தது.
  • இம்மாதத்தில் நபி(ஸல்) வேகமாக வீசுகின்ற புயல் காற்றை விட அதிகம் தர்மம் செய்திருக்கின்றார்கள். எனவே நாம் அண்டை, அயலார்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், மதரஸாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், அழைப்புப்பணி மையங்கள் என நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும்.
  • முஸ்லீம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கொள்கை(அகீதா) விஷயத்தில் பலஹீனமாக இருக்கின்றனர். எனவே குர்ஆன் ஹதீஸின் கருத்துக்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிதல் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதற்கும், அவர்கள் ஆற்றிய உரைகளை கேட்பதற்கும் இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • இஸ்லாமிய இணைய தளங்களை பார்த்து பயனுள்ள தகவல்களை சேகரித்து கௌ;வதுடன் மின் அஞ்சல் வழியாக நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
  • இஃப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவை அடைய முயற்ச்சிப்பது.

  • மரணத்திற்கு பின் உள்ள வாழக்கைக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்
.
ரமழான் மாதத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள்
  • இறந்து போன அவ்லியாக்களை அழைத்து பிரார்த்தனை செய்வது, உதவிதேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அறுத்து பலியிடுவது, அவர்களின் கப்ருகளை தவாஃப், ஸஜ்தா செய்வது இதுபோன்ற இணைவப்பான காரியங்களின் மூலம் நோன்பு உட்பட நாம் செய்யும் அனைத்து நல்லறங்களும் அழிந்து விடும். பார்க்க அல் குர்ஆன் 39 : 65,6:88
  • ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் மாதம் பத்ரு போர் நடை பெற்றது. இதனை காரணமாக வைத்து பத்ரு மவ்லூது என்றொரு மவ்லூதை பாடிவருகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
  • பொய், புறம், கோள், கேலி, கிண்டல், கோபம், வீண் விவாதங்கள், அசிங்கம், ஆபாசம், மோசடி, நம்பிக்கை துரோகம்... போன்ற அனைத்து தீய பண்புகளிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும். யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி)
  • புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்!. (2:195), உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்.(4:29) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் : நமக்கும் நாம் தீங்களிக்கக் கூடாது பிறருக்கும் தீங்களிக்கக் கூடாது.(ஆதாரம் : இப்னு மாஜா, ஹாக்கிம்)
  • சினிமா, இசை, பாடல்கள், நாடகங்கள், போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். பார்க்க அல் குர்ஆன் (31:6) நபி(ஸல்) கூறினார்கள் : இந்த சமுதாயத்தில் பூமியினுள் புதையுண்டு போவதும், கல்மாரி பொழிவதும், உருமாற்றமும் ஏற்படும் இது அவர்கள் மது அருந்துவதினால், பாடகிகளை வைத்து பாடல்களை கேட்டால், இசை கருவிகளை உபயோகிப்பதால் அவ்வாறு நிகழும் (ஆதாரம் : திர்மிதி) இப்னு ஹஸ்ம்(ரஹ்)கூறுகிறார் : அன்னியப்பெண்ணின் குரலை கேட்டு ரசிப்பது முஸ்லீம்கள் அனைவர் மீதும் ஹராமாகும்.
  • அதிகமான நேரங்களில் தூங்கியும், கேரம்போர்டு, செஸ், லுடோ இதுபோன்ற சதுரங்க விளையாட்டுக்களை விiளையாடியும், கேளிக்கைகளில் ஈடுபட்டும் நேரங்களை வீணடிக்கவேண்டாம்.
குற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர்(நரகத்தில்)நுழைய வைத்தது
எது?(என்றுகேட்பார்கள்.)...(வீணானவற்றில்)மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம் எனக் கூறுவர்:(74 : 41,45)
நபி(ஸல்)கூறினார்கள் எவனொருவன்(சதுரங்கம்)செஸ் விளையாடுகிறானோ அவன் தனது கையை பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் நனைத்தவனைப்போலாவான் (ஆதாரம் : முஸ்லிம்)

இது போன்ற அனைத்து தீய பழக்கங்களை விட்டும் ரமழானிலும் அல்லாத
நாட்களிலும் நம்மை பாதுகாதுகாத்துக்கொள்வோம்.

இறுதி பத்து நாட்கள், லைலத்துல் கத்ரு, இஃதிகாஃபின் சிறப்புகள்

(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம்
விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக
எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம் நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.(43 : 3,4)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற
இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு
அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக
மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1-5)

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ரு (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி) இந்த நபி
மொழியிலிருந்து பெண்களும் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்து ஏராளமான நபி மொழிகள் வந்துள்ளன.

மேலே கூறப்பட்டுள்ள நபி மொழிகளிலிருந்து ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பை உணர முடிகிறது. ஒரு மனிதன் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து விட்டால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது.


லைலத்துல் கத்ரு இரவு எப்போது?

ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)இந்நபி மொழியிலிருந்து நோன்பு 21,23,25,27,29 ஆகிய தினங்களில் ஏதேனுமொன்றில் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து கொள்ளலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் முஸ்லீம்களில் பெரும்பாலோர் 27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று எண்ணி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை காணலாம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
ஒற்றைப்படையான இரவுகளில் ஓதவேண்டிய துஆ

أللهم أنك عفو تحب العفو فاعف عني

தமிழில் : அல்லாஹும்ம இன்னக்க அஃகப்வுன் துஹிப்புல் அஃகப் வ ஃகபஉஃகபு அன்னீ.
பொருள் : இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை
விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (ஆதாரம் : திர்மிதி)

ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம்

நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்துல்ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)

யாரின் மீது கடமை?

முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள், அடிமை,
சுதந்திரமானவர் என அனைவர் மீதும் ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் கடமை. உஸ்மான்(ரலி) அவர்கள் வயிற்றிலுள்ள சிசுவிர்க்காகவும் இத்தர்மத்தை வழங்கி இருக்கின்றார்கள். பேணுதல் அடிப்படையில் இவ்வாறு வழங்குவது குற்றமாகாது.

எவற்றை தர்மமாக வழங்க வேண்டும்?

நாம் எந்த உணவை உண்போமோ அதுபோன்ற உணவு தானியங்களைத்தான்
தர்மமாக வழங்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள்
போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்...(2:267)

மேலும் ஆடையாகவோ, பாத்திரங்களாகவோ, வேறு பொருட்களாகவோ, பணமாகவோ வழங்குவது கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் உணவு தானியமாகத்தான் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள்.  நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.

ஜகாத்துல்ஃபித்ரின் அளவும், அது வழங்கப்படும் நேரமும், அத்தர்மத்தை
பெறத்தகுதியானவர்களும் ஜகாத்துல்ஃபித்ரின் அளவு 2கிலோ 500 கிராம் உணவு தானியமாகும்.

நோன்புப் பெருநாள் இரவிலிருந்து மறுநாள் காலை மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும்.

பெருநாள் அன்று காலையில் நிறைவேற்றுவது சிறந்ததுமாகும். அல்லது
பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதற்க்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் பெருநாள் தொழுகைக்குப் பிறகு இக்கடமையை நிறைவேற்றினால் ஏனைய தர்மங்களில் ஒரு தர்மமாகவே கருதப்படும். ஜகாத்துல்ஃபித்ர் தர்மம் பெற்றிட தகுதியானவர்கள் ஏழைகளும், நிறைவேற்ற முடியாத கடன் சுமை உள்ளவர்களும் ஆவார்கள். இத்தர்மத்தை ஒன்றுக்கதிகமான ஏழைகளுக்கும் வழங்கலாம். அல்லது பலருடைய தர்மங்களை ஒரே ஏழைக்கும் வழங்கலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்) யா அல்லாஹ்! எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் அதன்படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக! இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக! கருணை மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!

இக்கட்டுரை தொகுக்க உதவிய நூல்கள் :

ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்(ரஹ்) அவர்கள் எழுதிய மஜாலிஸ் ஷஹ்ரு ரமழான், ஃபதாவா அஹ்காமுஸ்ஸியாம்.
உஸைமீன்(ரஹ்) அவர்களின் மாணவர் ஷைக் ஃபவ்ஸி இப்னுஅப்துல்லா அவர்கள் எழுதிய அத்துர்ரத்துல் முஅத்தரா ஃபீ அஹ்காமிஸ்ஸியாம் ஃபீ ஷரீஅத்தில் முதஹ்ஹரா.


தொகுப்பு : மௌலவி ள.யாஸிர் ஃபிர்தவ்ஸி

புகை! உனக்குப் பகை!

வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.


சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக அதை விடும் போது அதில் நமது ஆண்மை உறுதிப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர்.

நட்புக்காக:

சில இளைஞர்கள் நட்புக்காக இந்த நரக நடத்தையில் மாட்டிக்கொள்கின்றனர். “நண்பன் ‘டம்’ அடிக்கும் போது சும்மா ‘கம்பனி’ கொடுப்பதற்காகக் குடிக்கின்றேன்!” என நொண்டிச் சாட்டுக் கூறிக்கொள்கின்றனர். உங்கள் நட்புப் பிரிந்த பின்னர் கூட நட்புக்காக உங்கள் வாயில் வைத்த சிகரட்டைப் பிடித்து, எடுத்துத் தூர எறிய உங்களால் முடியாமல் போய் விடும். எனவே நட்புக்காகவென உங்கள் உடலையும், உள்ளத்தையும், மறுமையையும், பணத்தையும் புகைக்கு இரையாக்க முனையாதீர்கள்!

அறியும் ஆவல்:

பெரியவர்கள் “டம்” அடிக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு அப்படி என்ன அதிலிருக்கின்றது? ஒரு முறை அடித்துத்தான் பார்ப்போமே! என்ற ஓர் ஆர்வம் பிறக்கின்றது. மதுபானத்தையும் சிலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் மது அவர்களைக் குடிக்க ஆரம்பித்து விடுகின்றது. பின்னர் அதை விட்டும் கழன்றுகொள்ளும் சக்தி அற்றவர்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.

அப்படி என்ன இருக்கின்றது? என்று ஆராயும் நண்பனே! நீ என்ன பெரிய விஞ்ஞானி என்று நினைப்பா உனக்கு? எதையும் அனுபவித்துத்தான் ஆராய வேண்டுமா? விஷத்தைக் குடித்துப் பார்த்து ஆராய்வாயா? சிங்கத்தின் வாயில் தலை விட்டுப் பார்ப்பாயா?

இது தேவையற்ற ஆராய்ச்சி!

முன்னர் இப்படி ஆராயப் போனவர்கள் இன்றைய குடிகாரர்கள்! நாளைய குடிகாரப் பட்டியலில் இடம்பிடிக்கத்தான் இன்று ஒரு “டம்” அடித்துப் பார்ப்போம் என்று அடம்பிடிக்கின்றாயா?

கவிதை வரும்! கற்பனை வரும்!

சிலர், “சிகரெட்டினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும்! கவிதை வரும்! கற்பனை வளம் கொழிக்கும்!” என்று தமது தவறை நியாயப்படுத்தி, பொய் கூறுவதில் நீ ஏமாந்து விட வேண்டாம்! சிகரெட் பிடித்தால் கவிதை-கற்பனையெல்லாம் வராது; வாயில் நாற்றம் வரும்; நுரையீரலில் நோய் வரும்; புற்றுநோய் வரும்; காசு போகும்; ஆண்மை குறையும். இந்த மாதிரி ஜடங்கள்தான் வரும்-போகுமே தவிர, கற்பனை-கவிதையெல்லாம் வராது! நம்முடைய நாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களெல்லாம் “டம்” அடித்துத்தான் கவிதை எழுதுகின்றனரா?

“டம்” அடித்தால் நல்ல எழுத்து வரும்!” என்றும் கூறுவார்கள். யாராவது பரீட்சை மண்டபத்தில் “டம்” அடித்துக்கொண்டு பரீட்சை எழுதுவதைப் பார்த்ததுண்டா?

“டம்” அடித்தால்தான்..

மற்றும் சிலர் இப்படியும் உளருவர்;
“எனக்கு “டம்” அடித்தால்தான் காலையில் காலைக் கடனைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியும்!” என்பர். இப்படியும் கன்றாவித் தனமாக உளர முடிகின்றதே! என்று ஆச்சரியமாக உள்ளது.

நமது நாட்டுச் சிறுவர்கள் காலையில் மலம் கழிப்பதில்லையா? பெண்கள் மலம் கழிப்பதில்லையா? ஏன்! இப்படிக் கூறுபவனே “டம்”முக்கு அடிமையாகும் முன்னர் மலம் கழித்ததில்லையா? ஒழுங்காக மலம் கழிக்காத சிறுவர்களுக்கு ஒரு “டம்” அடிக்கக் கொடுங்கள்! அனைத்தும் சரியாகி விடும்! என்று கூறும் ஒரு மருத்துவரையாவது நீங்கள் கண்டதுண்டா? மொட்டைத் தலைக்கும், ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று அர்த்தமற்ற வாதமாக இது தென்படவில்லையா? அல்லது “டம்” அடித்த போதையில்தான் இப்படி இவர்கள் உளறுகின்றனரா என்று புரியவில்லை.

“டம்” அடித்தால் ஆழழன வரும்:

இது சிலரது வரட்டு வாதம். தனது தவறை நியாயப்படுத்த அவர்களாக அடுக்கிக்கொண்டு செல்லும் அசட்டு வாதங்கள்தான் இவை. சரி! ஆழழன வருவதற்காக அடிப்பவன் வீட்டில் இருக்கும் போது தாம்பத்தியத்திற்கான சாத்தியம் இருக்கும் போது மட்டும் தானே புகைக்க வேண்டும். பயணத்தின் போதும், மனைவி பக்கத்தில் இல்லாத போதும் அடிக்கிறானே! அப்போது ஆழழன வந்தால் எங்கே போய் முட்டும் எண்ணம்! இதுவே இது போலிக் காரணம் என்பதைப் புரிய வைக்கப் போதிய சான்றாகும். ஆழழன வருவதற்காக அடிப்பவரின் மனைவிக்கு ஆழழன வர சிகரெட் பிடிக்க அனுமதிப்பாரா? சிகரெட் பிடித்து விட்டு, உனக்கு ஆழழன வந்தாலும் அந்த நேரத்தின் நாற்ற வாயுடன் இல்லறத்திற்கு நுழையும் போது மனைவிக்கு வாந்தி வரப் பார்க்குமே! “சனியன்! எப்ப தொலையுமோ!” என அவள் மனதுக்குள் வெறுத்துக்கொள்வாளே! அதற்கு என்ன செய்வதாம்? சிகரெட் பிடிப்பது ஆண்மையைக் குறைக்கின்றது என்பதுதான் அறிஞர்களின் கூற்றே தவிர, அது ஆண்மையை வளர்க்கும் என்பதல்ல என்பதைக் கவனத்திற்கொள்ளவும்!

அறிவு அற்றவன் செயல்:

“புகைத்தல்” என்பது அறிவற்றவர்களின் செயலாகும். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று “நாற்றமெடுக்கும் வாடை கிடைக்குமா? அழுகிய பெட்டீஸ் கிடைக்குமா?” என்று கேட்டு வாங்குவீர்களா? ஒருவன், “பழைய பழுதான உணவு உண்டு!” எனக் கூறி அழைத்தால் அதனை உண்டு மகிழ்வீர்களா? அறிவிருந்தால் இதைச் செய்ய மாட்டீர்கள்! ஆனால், சிகரெட் பெட்டியிலேயே “புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடானது!” என்று எழுதியுள்ளார்கள். அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றீர்கள் என்றால் இது அறிவுள்ளவர்களின் வேலையா? புத்தியுள்ள எவரும் இதைச் சரி காண்பார்களா? எனவேதான் “புகைத்தல்” என்பது புத்தியற்றவர்களின் செயல் என்கின்றேன்.

புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு:

“சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!” என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.
நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;

“அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.” (7:157)

நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.

“(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!” எனக் கூறுவீராக! மேலும், தாம்

“எதைச் செலவு செய்வது?” என்றும் உம்மிடம் கேட்கின்றனர். “(தேவைக்குப் போக) மீத முள்ளதை!” எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.” (2:219)

மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

தற்கொலைக்கு நிகர்:

சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.
இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.

ஒரு போட்டி நடத்தப்பட்டது:

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி “அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்” என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.

“மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.” (2:195)

எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் “ஹறாம்” என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.

வீண்-விரயம்:

இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..
ஒரு நாளைக்கு ” 70 ருபாய்
ஒரு வாரத்துக்கு ” 490 ருபாய்
ஒரு மாதத்திற்கு ” 2,100 ருபாய்
ஒரு வருடத்திற்கு ” 24,200 ருபாய்
பத்து வருடங்களிற்கு ” 242,000 ருபாய்
நாற்பது வருடங்களிற்கு ” 968,000 ருபாய்

இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?

இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?

“நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)

என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?

நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், “பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!” என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் “புகை” எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!

பிறருக்குத் தொல்லை:

“நல்ல முஸ்லிம் யார்?” என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி)

ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர்.

சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாகிப் போனால் அந்தக் குற்றத்தில் உங்கள் நறுமனம் சிகரெட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

வெங்காயமும், வெள்ளைப்பூடும்:

வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)

ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!

எனவே, புகைக்கும் நண்பர்களே!

புகைக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! சிகரெட்டுப் பிடிக்கும் நண்பர்களை விட்டும் கொஞ்சம் ஒதுங்குங்கள்! நீங்கள் சிகரெட் குடிக்கும் நேரங்களில் உங்கள் மனம் விரும்பும் ஏனைய காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்! அப்படியும் முடியவில்லையென்றால் ஒரு டொஃபியையோ(மிட்டாய்), சுவிங்கத்தையோ அந்நேரத்தில் வாயில் போட்டுக்கொள்ளுங்கள்! நண்பர்களாகச் சேர்ந்து “டம்” அடித்த இடங்களைத் தவிருங்கள்!

“ரமழான்” – நல்ல வாய்ப்பு:

புகைத்தலை விடுவதற்கு “ரமழான்” நல்ல வாய்ப்பாகும். 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் பயிற்சி எடுக்கின்றோம். இப்படிப் பயிற்சியெடுத்த சிலர் சிகரெட்டை ஒரு கடமை போன்றும், அதைக் கழாச் செய்து விட வேண்டும் என்பது போன்றும் கருதி, நோன்பு திறந்ததிலிருந்து ஸஹர் வரைக்கும் ஊதித் தள்ளிப் பகல் குடிக்காததையும் ஈடு செய்து விடுகின்றனர்.
சிகரெட் குடிப்பதில்லை என நீங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் இஃப்தாருக்குப் பின்னர் சற்று நேரந்தான் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள்.

அந்த நேரத்தில் உறுதியாக இருந்து விட்டால் அதன் பின் கியாமுல்லைல்; அதன் பின் உறக்கம்; விழித்ததும் ஸஹர் என்று காலம் போனால் சிகரெட்டை முழுமையாகக் கைவிட முடியும். நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட இந்த வீணான செயலை நீங்களேதான் விட வேண்டும். வேறு யாரும் வந்து உங்களுக்கும் சிகரெட்டுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்த மாட்டார்கள்.

எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள்! அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்! நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நோன்பிலாவது இதை நீங்கள் விட்டு விடவில்லையென்றால் உங்கள் வாழ்வை ஹறாத்தை விட்டும் நீங்கள் காத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் சிகரெட்டில் வைத்த நெருப்பு நாளை நரக நெருப்பு வரை உங்களைக் கொண்டு சென்று விடலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள்.


பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே தவிர பலமான செய்திகள் அல்ல என்பதற்காகவே மக்களின் பார்வைக்கு தருகிறோம்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எமக்கு அருள்புரிவாயாக! ரமழானை அடைந்து கொள்ளும் பாக்கியத்தை தருவாயாக என நபியவர்கள் கூறினார்கள். (நூல்: பஸ்ஸார். தபரானி) இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் ஸாயித் பின் அபீ ருகாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி (ரஹ்) அவர்களும் இவர் பலஹீனமானவர் என்று இமாம் நஸயீ (ரஹ்), இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- ரமழானின் ஆரம்ப (பத்து நோன்புகளு)ம் ரஹ்மத்தாகவும் அதன் நடுப்பகுதி (பத்து நோன்புகளும்) மஃபிரத்தாகவும் அதன் இறுதி பகுதி (கடைசிப் பத்து) நரக விடுதலையாகவும் உள்ளது நபியவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னு குஸைமா) இதன் அறிவிப்பாளர் தொடரில் அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும் இந்த செய்தியை பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா (ரஹ்) அவர்கள் இது பலவீனமானது என்பதை குறிக்க ‘இது உறுதியானதாக இருந்தால்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்கள். பலஹீனமான ஹதீஸை அடையாளம் காட்டுவதற்கு இமாம்கள் கையாளும் முறை இது.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- ரமழானில் உள்ள சிறப்புகளை அறிந்தால் வருடம் பூராவும் ரமழானாக இருக்க வேண்டும் என எனது உம்மத்தவர்கள் ஆசைகொள்வார்கள் என நபியவர் கள் கூறினார்கள். (நூல்: அபூயஃலா) இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜரீர் இப்னு அய்யூப் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர். மேலும், இது பலஹீனமானது என்பதை இமாம் இப்னு குஸைமா (ரஹ்) மேல் கூறியவாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

எனது உம்மத்தில் ஒரு மனிதனை கண்டேன். அவர் தாகத்தோடு தடாகத்திற்கு (அவ்லுல் கவ்ஸரக்கு) வரும் போதெல்லாம் தடுக்கப்பட்டார். அப்போது நோன்பு வந்து அவருக்கு நீர் புகட்டியது என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: தபரானி) இதன் அறிவிப்பாளர் தொடரில் சுலைமான் இப்னு அஹ்மத் அல்வாஸிதி என்பவ ரும் காலித் இப்னு அப்துர் ரஹ்மான் அல் மக்சூமி என்பவரும் இடம்பெறுகிறார்கள். இவ்விருவரும் பலஹீனமானவர்கள். இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் இதை பலஹீனமானது என விமர்சனம் செய்கிறார்கள்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- நோன்பாளிகளின் வாய்களிலிருந்து கஸ்தூரி வாடை வெளிப்படுகிறது. அவர்களுக்கு அல்லாஹ்வின் அர்ஷுக்குக் கீழ் (உணவு) தட்டு வைக்கப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அத்துர் ருல் மன்சூர் 1/182 எனும் நூலில் இச்செய்தியை குறிப்பிடுகிறார்கள். ஆனாலும் இது பலஹீனமானது என இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்களும் ஏனைய இமாம்களும் விமர்சனம் செய்கிறார்கள்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- நோன்பாளியின் தூக்கம் இபாதத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அல் ஜாமிஉஸ் ஸகீரில் (9293) குறிப்பிடுகிறார்கள். இதில் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்பா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஸைனுத் தீன் அல் ஈராகி (ரஹ்) இமாம் பைஹகி (ரஹ்) இமாம் சுயூத்தி (ரஹ்) ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல்பிர்தவ்ஸ் 4/248) (இந்தச் செய்தியை வைத்தே சிலர் பகல் முழுவதும் தூக்கத்தில் காலத்தை கழிக்கிறார்கள்)

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- எவர் ரமழானில் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழுகிறாரோ அவர் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொண்டவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் இஸ்பஹானி). இது முர்ஸல் எனும் பலஹீனமான செய்தியாகும். இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்களின் கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு குஸைமாவில் வரும் இச்செய்தியில் உக்பத் இப்னு அபீல் ஹஸ்னா என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என அறியப்படாதவர். பலஹீனமானவர் (மஜ் ஊல்) என இமாம் இப்னு முதீனி (ரஹ்) கூறுகிறார்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- நோன்பு பொறுமையின் பாதியாகும் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா). இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் மூஸா இப்னு உபைதா என்பவர் பலஹீனமானவர் என அஷ் ஷெய்க் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- மாதங்களின் தலைவர் ரமழானாகும். அம்மாதங்களில் கண்ணியமான மாதம் துல்ஹஜ் மாதமாகும். (நூல்: பஸ்ஸார், தைலமி) இதன் அறிவிப்பாளர் தொடரில் யஸீத் இப்னு அப்துல் மாலிக் அன்னுபைலி என்ப வர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் மஜ்மூஉல் ஸவாத் எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். (3/140)

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- வானத்தில் சில மலக்குகள் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள். ரமழான் மாதம் வந்துவிட்டால் முஹம்மது நபியின் உம்மத்தினருடன் சேர்ந்து கொள்ள அவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (நூல்: பைஹகி) பைஹகி நூலில் இது அலி (ரலி) அவர்களின் வார்த்தையாக (மவ்கூப்) பதிவாகியுள்ளது. மேலும் இச்செய்தி பலஹீனமானது என இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் அத்துர்ருல் மன்சூரில் (8ஃ582) குறிப்பிடுகி றார்கள். மேலும் கன்ஸுல் உம்மால் (8ஃ410) நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- நோன்பு திறக்கும்போது ஓதும் துஆ: அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வலாரிஸ்திக அப்தர்து’ என்று வரும் ஹதீஸ் அபூதாவூத் (2358) மற்றும் இப்னு ஸுன்னு பிஅமலில் யவ்மி வல்லைலா (481) எனும் நூலில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் மலிக் பின் ஹாரூன் பின் அன்தரா என்பவர் இடம்பெறுகிறார். இவர் பலஹீனமானவர் என்று இமாம் அஹ்மத் (ரஹ்) தாரகுத்னி (ரஹ்) இமாம் அபூ ஹாதம் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.
இது உறுதியான செய்தியல்ல என இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடு கிறார்கள். (நூல்: ஸாதுல் மஆத் (2÷54)

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

ரமழானில் ‘அல்லாஹ்வை நினைவூட்டு பவர் (திக்ரு செய்பவரது) பாவங்கள் மன் னிக்கப்படும் என நபி (ஸல்) கூறினார்கள். இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்களுடைய அல்ஜாமிஉஸ் ஸகீர் நூலிலும் தபரானியிலும் பைஹகியிலும் இச்செய்தி பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹிலால் இப்னு அப்துர் ரஹ்மான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலஹீனமானவராவார்.

நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்

- நோன்பாளியாக இருக்கும்போது பகலில் (கண்ணுக்கு) சுர்மா) இடக்கூடாது என நபி இவர்கள் கூறினார்கள். (நூல் அபூதாவூத்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) அவர்கள் இச்செய்தி நிராகரிப்பட வேண்டியதென விமர்சனம் பண்ணுகிறார்கள்.

மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!

புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.



நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:83)

மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.

-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.

இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.

இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.

உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.

நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!
“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.

உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.

மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.

நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது

“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.

அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.

மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.

நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)

சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!

அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.

அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.

மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.

“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.

எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.

எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்

நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது. பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல் நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.

இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.

‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்ச இஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது. பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது. மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார். முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.

காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.
இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல் இவர்களைத் தாக்கியது.
சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.

சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.
தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல். கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.

இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார். அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவே இலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்கா பணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்.