மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?


நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் தலை சிறந்தது கம்ப்யூட்டர் தான்.
இதில் படம் பார்க்கலாம்! எழுதலாம்! வாசிக்கலாம்! ஏராளமான நூல்களைப் பதிவு செய்யலாம்! பேசலாம்! வரையலாம்! வடிவமைக்கலாம்! உலகை எல்லாம் வலையில் இணைக்கலாம்! இருந்த இடத்திலிருந்து கொண்டே விற்கலாம்! வாங்கலாம்! இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்!






அதன் உறுப்புகளைப் பல வகைகளில் வகைப்படுத்தலாம்!


அதன் ஜீவனாக இருக்கின்ற சிலிக்கானும் இன்ன பிற பாகங்களும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா?
இப்போது மண் வடிவத்தில் அவை இல்லாவிட்டாலும் மண்ணிலிருந்து அவை தோன்றியதை மறுக்க முடியுமா?
நீங்கள் வாசிக்கின்ற பேப்பர் தனி ஒரு பொருள் என் றாலும், அதுவும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா? மரக்கூழிலிருந்து இது தயாரிக்கப்பட்டாலும் மரம் மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட சக்தியால் தான் வளர்ந்தது.
எனவே மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.


இப்போது உலகில் 600 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 30,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.


ஒரு மனிதனும் இல்லாத போது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 600 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது. 


600 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமான போதும் 30 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 600 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 30 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம். 


நாம் உண்ணுகிற உணவுகள் மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.
ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.


எனவே முதல் மனிதர் மட்டும் அல்ல. நீங்களும், நானும் கூட மண் தான் என்பதை பூமியின் எடை நிரூபிக்கிறது.
நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப்பார்த்தால் போதுமே! எதிலிருந்து படைக்கப்பட்டார் களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!


ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். உங்கள் உடம்பில் இவை தாம் உள்ளன. கார்பன் அது'இது' என்றெல்லாம் வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.


முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப் பட்டான் என்பதும் அவனது வழித்தோன்றல்கள் மறைமுக மாக மண்ணிலிருந்து தான் பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.


அறிவியல் பூர்வமாக விளக்கம் கேட்கிறீர்கள்.


மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்த போது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.


ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்ட் வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.


70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:


1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 �

இஸ்லாமிய வங்கிகளும் கடமையில் இல்லாத ஆலோசகர்களும்.!

இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன. இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முதலீட்டின் அளவும் கூடி வருகிறது.

உலகம் முழுவதும் வட்டியை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய வங்கிகள் சகலதும் இஸ்லாமிய வங்கிச் செயற்பாட்டு பிரிவுகளை ஆரம்பித்து வருவது வரவேற்கத்தக்க ஒரு முன்னெடுப்பாக இருந்தாலும் , இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சில துறை சாராத பிரபலங்களைக் கொண்ட ஆலோசகர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சில நிதி நிறுவனகள் இஸ்லாமிய நிதி முறைமைகளை சந்தைப் படுத்துவது குறித்து முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

புனித ரமலானே வருக!


புனிதமும் கண்ணியமும் மிக்க அருள்மிகு மாதம் ரமலானின் வருகை, கடமையான நோன்புகளை நிறைவேற்ற நமக்கு வாய்ப்பளிப்பதோடு ரமலானின் 30 நாட்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற வேண்டிய நோக்கத்துடன் நம்முடைய உள்ளங்களிலும் நம்மைச் சுற்றி உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்விலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது, 

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்.

இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை.

கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ ''வெறுமையானது''. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணுவதும், காதுகளால் கேட்பதும், தொடு கையினால் உணருவதும், நாக்கினாலே ருசிக்கின்றதும் அவர்களது 'புதிய' மூளையில் பதிந்து மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்!

அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். [Quran 2:22]

வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.




மண்ணறை வாழ்க்கை

உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம். இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, “மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள். நாமோ, “மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ரில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சரியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

தஜ்ஜாலின் வருகை



'நூஹ் (அலை) அவர்களுக்குப்பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ உபைதா (ரலி) நூல்கள் - திர்மிதீ, அபூதாவூத்.

நபியவர்களின் உம்மத்தின் சிறப்பம்சங்கள்


உலகில் நாம் ஆதரிக்கின்ற அல்லது உறுப்புரிமை பெற்ற ஒரு கட்சி வெற்றியைத் தழுவும் போது, அது குறித்து நாம் எவ்வளவு பெருமிதம் அடைகிறோம். நபியவர்களின் உம்மத்தின் உறுப்பினராக இருக்கக்கூடிய நாம் என்றாவது அதனை எண்ணி காரியமாற்றியிருக்கின்றோமா? என்பதே எம் செயல்பாடுகள் உணர்த்தும் வினாவாகும்.

இறைத் தூதரின் இறுதி கட்ட மணித்துளிகள்



கண்கள் குளமாகின்றன, நம் நேசமிகு இறைத் தூதரின் இறுதி வேளையை நினைத்து. மரணத்தின் கடைசி மணித் துளிகளில் நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கண்களின் நீரோட்டத்தை நம்மால் அடக்கிக் கொள்ள முடியாது.உங்களின் நினைவலைகளை ஓரிரு நிமிடங்கள் பின்னோக்கி நகர்த்தி, பெருமானார் வாழ்ந்த காலத்திற்கு சென்று இதை படியுங்கள்.அவர்களுக்கே இந்த நிலை என்றால்... நமக்கு?!

வாடகையும், வட்டியும் சமமாகுமா?

வாடகை, வட்டி இவை இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. வாடகைக்கு குடியிருப்பதும், வாடகைக்கு பொருள் எடுப்பதும் தவறில்லை என்றால் பணத்தைக் கடனாகக் கொடுத்து அதற்கு வட்டி வாங்குவதும் வாடகை போன்றது தான். அதாவது வீடு, பொருட்களை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது போல பணத்தை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது வட்டியில் சேராது என்று வாடகையும், வட்டியும் ஒரு தன்மையைக் கொண்டது என நண்பர் ரியோ கருத்து வைத்திருக்கிறார்.




பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ள முடியுமா?

பொதுவாக இன்றைய எமது சமூக சூழலில் பெண்கள் பள்ளிவாசலோடு உள்ள தொடர்பை நிறுத்திக் கொண்டார்கள்.

ரமழான் மாத காலத்தில் மட்டும் பள்ளிக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்கிறார்கள். ஏனைய சந்தர்ப்பங்களில் ஐவேளை தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருவதில்லை. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்ற தடையேதும் நபியவர்கள் விதிக்கவில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


நாட்டுப் புறங்களை விட கிராமப் புறங்களில் பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் ஈடுபடக் கூடிய அமைதியான சூழல் இருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் இது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மடமையைத் தகர்ப்போம்

உலகம் படைக்கப்பட்ட நாட்களிலிருந்து அல்லாஹுத்தஆலா ஒரு வருடத்தை பன்னிரெண்டு மாதங்களாகத்தான் படைத்திருக்கின்றான். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்-குர்ஆன் 9:36).



அல்குர்ஆனின் போதனை உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?

இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70).




கழிப்பறை ஒழுக்கங்கள்

மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்டபோது ஆம் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான்(ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)

அன்புள்ள சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.

நஜீஸின் வகைகள்

நஜீஸ் என்றால் அசுத்தம் என்று பொருள். அசுத்தம் பல வழிகளில் ஏற்படும். மனிதனின் உடல், ஆடை மற்றும் இடங்களில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்குவது அவசியமாகும். தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபடும் போது சுத்தமாக இருப்பது மிக அவசியாகும். நஜீஸ்களின் வகைகள் பின்வருமாறு.

1. செத்த பிராணி
செத்த பிராணி என்பது இஸ்லாமிய முறையில் அறுக்கப்படாமல் உயிர் பிரிந்தவைகள். இவைகள் அனைத்தும் அசுத்தமானவையாகும். ஆனால் வெட்டுக்கிளி மற்றும் மீன் இவை இரண்டும் செத்துவிட்ட பின்பும் சுத்தமானவையாகும். இவைகளை செத்த பின்பும் உண்ணலாம்.

எங்களுக்கு மீன், வெட்டுக்கிளி இவ்விரண்டும் மரணித்ததற்குப் பின்பும் உண்பதற்கு ஹலாலாக்கப்பட்டிருக்கின்றது என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
செத்த பிராணியின் எலும்பு, கொம்பு, நகம், இறகு, பதனிடப்பட்ட தோல் இவைகள் அனைத்தும் சுத்தமானவைகளாகும்.

2. இரத்தம்
செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக, அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தாலல்லாது, உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு வஹீ மூலம் அறிவிக்கபட்டவற்றில் நான் காணவில்லை, காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும்.(அல்குர்ஆன் 6:145)
அதாவது ஒரு பிராணியை அறுத்த பின் அதில் இருந்து ஓடக்கூடிய இரத்தம். இது அசுத்தமானது. இதை உண்பதும் ஹராமாகும்.

ஆனால் இறைச்சியில் உளுங்காக கழுகாமல் விடப்பட்டிருக்கும் அல்லது ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்தம் இருப்பதினால் அவ்வுணவு அசுத்தமானதாக ஆகிவிடாது.

சமைக்கும் பாத்திரத்தின் மீது இரத்தக்கோடுகள் இருக்கும் நிலையில் நாங்கள் இறைச்சியை உண்போம் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

3. பன்றி இறைச்சி
செத்தவையாக அல்லது ஓடும் இரத்தமாக, அல்லது பன்றியின் மாமிசமாக இருந்தாலே அல்லாது, உண்ணுபவருக்கு அதை உண்ணத் தடை செய்யப்பட்டதாக எனக்கு வஹீ முலம் அறிவிக்கபட்டவற்றில் நான் காணவில்லை, காரணம் நிச்சயமாக அவை அசுத்தமானவையாகும். (6:145)

4. சிறுநீர், மலம், வாந்தி
இம்மூன்றும் அசுத்தம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் பால்குடி மறக்காத ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தண்ணீரை தெளித்து விட்டால் போதும். பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும்.

உம்மு கைஸ் என்னும் நபித்தோழி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் தனது சிறுகுழந்தையை கொண்டு வந்தார்கள். அக்குழந்தை நபியவர்களின் மடியில் சிறுநீர் கழித்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி கழுகாமல் அதன்மீது தெளித்து விட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

சிறு ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் அதன்மீது தண்ணீரை தெளித்து விட வேண்டும். சிறுமியின் சிறுநீர் பட்டால் அதனை கழுவ வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

சிறு குழந்தையென்பது பாலை மாத்திரம் உணவாகக்கொள்ளக்கூடிய குழந்தைகள், உணவை உண்ண ஆரம்பித்து விட்டால் அக்குழந்தைகளின் சிறுநீரை கழுவியே ஆக வேண்டும்.

தரையில் சிறுநீர் பட்டுவிட்டால் அதன்மீது தண்ணீரை ஊற்றிவிட்டால் போதும்.

ஒரு நாள் ஒரு கிராமவாசி நபியவர்களின் பள்ளிக்குள் வந்து சிறுநீர் கழித்து விட்டார். நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளித்தண்ணீரை எடுத்து அதன்மீது ஊற்றிவிட்டார்கள்.

5. வதி
அதாவது சிறுநீர் கழித்த பின் வெளியாகும் கனமான வெள்ளை நிறமுள்ள நீர், இது அசுத்தமான நீர், இந்நீர் படும் இடத்தை கழுவ வேண்டும்.

வதி வெளியாவதினால் ஆண் உறுப்பையும் அதன் பகுதியையும் கழுவிக்கொண்டு தொழுகைக்கு உளூ செய்வதைப்போல் உளூ செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)

6. மதி
அதாவது காம உணர்வுகள் ஏற்படும் போதும், கணவன் மனைவி உறவின் போதும் வெளியாகும் வழுவழுப்பான நீர், இந்த நீர் வெளியாகும் போது சில நேரம் மனிதன் அதை உணராமல் இருக்கலாம், இதுவும் அசுத்தமான நீர்தான், இந்நீர் படும் இடத்தையும் கழுவ வேண்டும்.
நான் அதிகம் மதி வெளியாகும் மனிதனாக இருந்தேன், நபி(ஸல்) அவர்களின் மகளை நான் திருமணம் முடித்திருந்த காரணத்தினால் நபி(ஸல்) அவர்களிடம் இதைப்பற்றி கேட்க வெட்கப்பட்டேன், இதனால் இன்னும் ஒருவரிடம் அதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கும் படி கூறினேன், அவர் நபி(ஸல்) அவர்களிடம் (அதைப்பற்றி) கேட்டார், உளூ செய்து உமது ஆண் உறுப்பை கழுவிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள் என அலி(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

7. நாய்
உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நக்கினால் அதை ஏழு முறை களுவுங்கள் அதில் ஒரு முறை மண்ணைக் கொண்டு கழுவ வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - முஸ்லிம்)

தகனம் செய்யப்பட்ட மையத்துக்கு கேள்வி கணக்கு உண்டா?



அடக்கம் செய்யப்படுகின்ற ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு உண்டு என்பதை எல்லோரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படியானால் தகனம் செய்யப்பட்டு (எரிக்கப்பட்டு) சாம்பலை கடலில் கரைத்து விடக் கூடிய ஜனாஸாவுக்கு கேள்வி கணக்கு வேதனை இல்லையா? என்ற கேள்வியை பலரும் கேட்பதுண்டு.


அதுபோல் கடலில் அல்லது ஆற்றில் மூழ்கி மீன்களுக்கு இரையாகிப் போன மையத்துகளுக்கும் குண்டு வெடிப்பில் சிதைந்து போன மையத்துக்ளுக்கும் இது போன்ற நிலையில் உள்ள மையத்துக்களுக்கும் கேள்வி கணக்கு உண்டா? வேதனை உண்டா? என்றும் கேட்கின்றனர். அல்லாஹ்வின் வல்லமையை தெரிந்து கொண்டால் இதற்கான பதிலும் கிடைத்துவிடும்.

அல்லாஹ் மனிதனை (படைப்பினங்களை) படைக்கும்போது எந்த முன்மாதிரியுமின்றி அவன் நினைத்த மாதிரி படைத்தான். ஒரு துளி நீரிலிருந்துதான் மனிதனை படைத்தான். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் ‘ஆகுக’ என்று கூறிவிடுவான். அது உடனே (ஒரு படைப்பாக) ஆகிவிடும். இப்படியான வல்லமை படைத்த அல்லாஹ்வுக்கு, தகனம் செய்யப்பட்ட கருகி சாம்பலாகிப் போன சிதைந்துப் போன உடல்களை மீண்டும் ஒன்று சேர்க்க முடியாதா? கேள்வி கேட்க முடியாதா? ஆற்றலும் வல்லமையுமுள்ள அல்லாஹ்வுக்கு இது மிகவும் இலகுவான காரியம். பின்வரும் குர்ஆன் வசனத்தையும் ஹதீஸையும் நிதானமாக படியுங்கள். சந்தேகத்திற்கு தெளிவான பதில் கிடைக்கும்.

“மனிதனை (ஒரு துளி) விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில் லையா? (இப்போது) அவனோ நம்மை மறு த்து) பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.

அவன் நமக்கு (ஒரு) உதாரணம் காட்டுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான்.

“முதல் தடவை இதை யார் படைத்தா னோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று நபியே நீர் கூறுவீராக. (36:77-79)

நபி (ஸல்) அவர்கள் முன்சென்ற அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தையையும் வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று பதில் கூறினர். அவர் தமக்காக எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை.

அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே (அவர் தம் மக்களிடம்) நன்றாக கவனியுங்கள். நான் இறந்து விட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். (தகனம் செய்து விடுங்கள்) நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் பொடிப் பொடியாக்கிவிடுங்கள். அல்லது துகள் துகளாக்கி விடுங்கள். பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவி விடுங்கள் என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் உறுதி மொழியும் வாங்கிக் கொண்டான்.
என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ், (தூவி விடப்பட்ட சாம்பலை) ஒன்று சேர்த்து மனிதனாக) ஆகிவிடு என்று கூறினான். உடனே அவர் மனிதராக (உயிர் பெற்று) எழுந்து நின்றார். அவரிடம் அல்லாஹ் என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது என்று பதிலளித்தார். ஆகவே அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். அருள் புரிந்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) ஹுபைதா (ரலி) நூல்: புகாரி (3478, 3479, 3481, 6480, 6481)

அடக்கம் செய்யப்பட் உடலை வெளியில் எடுக்கலாமா?



மருத்துவப் பரிசோதனை கருதி அடக்கம் செய்யப்பட்ட உடலை (மையத்தை) வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறான நிர்ப்ந்தமான சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கு தடையேதும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
(முனாபிக்குகளின் தலைவரான) அப்துல்லாஹ் இப்னு உபையின் உடல் கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் அ(ந்த மையத்)தை வெளியில் எடுக்குமாறு கூறினார்கள். வெளியில் எடுக்கப்பட்டதும் அதை தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ் நீரை உமிழ்ந்து தமது மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி (1350)

(‘உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட) எனது தந்தையுடன் இன்னொருவர் (ஒரே குழியில்) அடக்கம் செய்யப்பட்டார். ஆயினும் எனது மனம் அதை விரும்பில்லை. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன். அப்போது அன்றுதான் அடக்கம் செய்யப்பட்டவர் போல அவரது உடல் (பாதிப்பில்லாமல்) இருந்தது. காதைத் தவிர (காது பழுதுபட்டிருந்தது) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (1351,1352)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.



இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.

யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.

இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.

இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.

பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.

முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.

இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.

நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.

ஆண் பெண் ஜனாஸாக்களுக்கு, ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாமா?


ஆண் மைத்துக்களையும் பெண் மையத்துக்களையும் ஜனாஸா தொழுகை நடத்த ஒரே நேரத்தில் கொண்டு வந்தால் முதலில் ஆண் மையத்திற்கு தொழுகை நடத்தி விட்டு பிறகு பெண் மையத்துக்கு தொழுகை நடத்துகின்ற ஒரு காட்சியை சில சந்தர்ப்பங்களில் காணமுடிகிறது.


ஆண் மையத்திற்கும் பெண் மையத்திற்கும் ஒரே நேரத்தில் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி செய்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ‘சுன்னா’ பற்றிய சரியான தெளிவு அவர்களுக்கு இல்லாததால் தான் இப்படி செய்கிறார்கள். இது தவறாகும்.

ஆண் மையத்திற்கும் பெண் மையத்திற்கும் ஒரே நேரத்தில் ஒரு ஜமாஆத்தாக இருந்து தொழுகை நடத்தலாம். நடத்தவும் வேண்டும் என்பதே நபிகளாரின் சுன்னாவாகும். அப்படி தொழுகை நடத்தும் போது முதலில் கிப்லாவை நோக்கி பெண் மையத்தையும் அதற்கடுத்து (சிறுவர்களின் ஜனாஸாக்கள் இருந்தால் அவர்களது மையத்துக்களையும்) அதற்கடுத்து ஆண் மையத்தையும் வைக்க வேண்டும். அதற்கடுத்து தொழுகை நடத்தக்கூடிய இமாமும், இமாமுக்கு அடுத்து தொழக் கூடியவர்களும் (மஃமூம்களும்) நிற்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒன்பது ஜனாஸாக்களக்கும் சேர்த்து ஒரே (ஒரு முறை) தொழுகையாக தொழுவித்தார்கள். (அதில் ஆண், பெண் ஜனாஸாக்கள் இருந்தன). கிப்லாவை நோக்கி பெண் ஜனாஸாக்களையும் அதற்கடுத்து ஆண் ஜனாஸாக்களையும் அதன் பின் இமாமை அடுத்து மக்களையும் ஒரே அணியாக வைத்து (தொழுவித்தார்)கள்.

இன்னுமொரு ஜனாஸா தொழுகையின் போது) அலி (ரலி) அவர்களின் மகளும், உமர் (ரலி) அவர்களுடைய மனைவியுமான உம்மு குல்ஸும் (ரலி) அவர்களுடைய ஜனாஸாவும் ஸைத் என்று அழைக்கப்படும் அவரது மகனுடைய ஜனாஸாவையும் சேர்த்து வைக்கப்பட்டன. அன்றைய தினத்தில் ஜனாஸா தொழுகையை நடத்தும் இமாமாக ஸயீத் பின் அல் ஆஸ் என்பவர் இருந்தார். இப்னு உமர் (ரலி) அபூ ஹுரைரா (ரலி) அபூ ஸயீத் (ரலி) அபூ கதாதா (ரலி) ஆகியோர் அக்கூட்டத்தில் (ஜனாஸா தொழுகையில்) இருந்தனர்.
(தொழுகை நடத்துவதற்கு) இமாமுக்கு முன்னால் சிறுவரின் ஜனாஸாவும் அதற்கு முன்னால் (கிப்லாவை நோக்கி) அவரது தயாரின் ஜனாஸாவும்) வைக்கப்பட்டன. இது எனக்கு வெறுப்பாக தோன்றியது. உடனே நான் இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) அபூ ஸயீத் (ரலி) அபூ கதாதா (ரலி) ஆகியோரை நோக்கி இது என்ன முறை? (ஏன் இப்படி தொழுகை நடத்த வேண்டும்) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதுதான் நபிவழி என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: நாபிஃ (ரஹ்) நூல்: நஸாயீ(1977,1978) அபூதாவூத்