மருத்துவப் பரிசோதனை கருதி அடக்கம் செய்யப்பட்ட உடலை (மையத்தை) வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். இவ்வாறான நிர்ப்ந்தமான சூழ்நிலையில் அவ்வாறு செய்வதற்கு தடையேதும் இல்லை என்பதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
(முனாபிக்குகளின் தலைவரான) அப்துல்லாஹ் இப்னு உபையின் உடல் கப்ருக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள் அ(ந்த மையத்)தை வெளியில் எடுக்குமாறு கூறினார்கள். வெளியில் எடுக்கப்பட்டதும் அதை தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ் நீரை உமிழ்ந்து தமது மேலாடையையும் அதற்கு அணிவித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி (1350)
(‘உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட) எனது தந்தையுடன் இன்னொருவர் (ஒரே குழியில்) அடக்கம் செய்யப்பட்டார். ஆயினும் எனது மனம் அதை விரும்பில்லை. எனவே, ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரது உடலை வெளியிலெடுத்து அதைத் தனி கப்ரில் அடக்கம் செய்தேன். அப்போது அன்றுதான் அடக்கம் செய்யப்பட்டவர் போல அவரது உடல் (பாதிப்பில்லாமல்) இருந்தது. காதைத் தவிர (காது பழுதுபட்டிருந்தது) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி (1351,1352)
No comments:
Post a Comment