இஸ்லாத்தில் மனித உரிமைகள்

இறைவன் இப்பேரண்டத்தின் நிகரற்ற தனித் தலைவனாக, பேரதிபதியாக இருக்கின்றபடியால், அவனே அரசாண்மை மிக்கவன். பாதுகாவலன், புரவலன், கருணையாளன். அவனே அனைவரையும் படைத்துள்ளான். அவனின் கருணையைக் கொண்டே அனைத்து உயிர்களும் ஜீவிக்கின்றன. மேலும், அவனே அனைத்து உயிருக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளான். இந்த எதார்த்த உண்மைகள் எதனை உணர்த்துகின்றன? மனிதர்கள் தம்முடைய தன்மைகளில் எவ்வளவு வேறுபட்டிருந்தாலும் ஒன்றிணையலாம். அவனைக் கொண்டே தங்களிடையே சமத்துவத்தையும் சம உரிமையையும் நிலைநாட்டலாம். அவர்களிடம் மேலோட்டமாக பல வேற்றுமைகள் தென்பட்டாலும், இன- நிற-மொழி அடிப்படையில், பிரதேச அடிப்படையில் பல வேறுபாடுகள் இருந்தாலும் அவை அடிப்படையானவை அல்ல. மனிதர்கள் அனைவரும் ஏக இறைவனின் படைப்பினங்கள் எனும் வகையில் அவற்றைக் களையலாம். இவ்வாறு கருணைமிக்க ஒரே இறைவனுக்கு அஞ்சிப் பணிகின்ற காரணத்தால் மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே! இது ஒரு பாரபட்சமற்ற, சாந்தி மிகுந்த சூழலாகும். இத்தகு சூழலின் இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவம்-ஓரிறைக் கொள்கை மேலோங்கி மைய அச்சாக விளங்குவதால் மனிதகுலம் முழுவதும் சகோதரத்துவ அடிப்படையில் ஒன்றாக இருப்பதும் அவசியமாகி விடுகின்றது.


இறைவன் ஒருவனே எனும் போது மனிதர்கள் அனைவரும் அவனது படைப்புகளே என்பதும் தெளிவாகின்றது. உலகில் ஏதாவதொரு பாகத்தில் இஸ்லாமிய ஆட்சி அமைய வாய்ப்பு இருந்தாலும் பூகோள அடிப்படையில் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமே மனித உரிமைகள், மாண்புகள் பேணப்பட வேண்டும் என இஸ்லாம் வரையறுக்கவில்லை. இஸ்லாம் அளித்திருக்கும் உரிமைகள் உலகலாவியவை. மனிதகுலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியவை. அந்த உரிமைகள்-ஒரு இஸ்லாமிய அரசுக்குட்பட்ட எல்லையில் வாழ்ந்தாலும் சரி, அதற்கு வெளியே வாழ்ந்தாலும் சரி, போரிட்டாலும் சரி, எந்த நிலைமையானாலும் கடைபிடிக்க வேண்டியவையே!

குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது :

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக வாய்மையில் நிலைத்திருப்போராயும் நீதிக்குச் சான்று வழங்குவோராயும் திகழுங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விடக் கூடாது. நீங்கள் நீதி செலுத்துங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிகப் பொருத்தமானது. (5:8)

மனித இரத்தம் புனிதமானது. எந்நிலையிலும் அதனை அநியாயமாக சிந்தக் கூடாது. இந்தச் சட்டத்தை மீறி ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்பவர் மனிதகுலம் முழுவதையும் கொலை செய்தவரைப் போன்றவராவார்.

குர்ஆன் கூறுகிறது :

பூமியில் குழப்பம் ஏதுமற்ற நிலையில் அநியாயமாக ஒருவரை கொலை செய்பவர் (இறந்தவர் மீது கொலைப் பழி இல்லாத நிலையில்) மனித குலம் முழுவதையுமே கொன்றவர் போன்றவராவார். (5:32)

பெண்கள், மழலைகள், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், காயமடைந்தோர் ஆகியோரைக் கொடுமைப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. எல்லா சூழலிலும் பெண்களின் கற்பும், கண்ணியமும் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் வறியவர்கள், காயமடைந்தோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

இஸ்லாத்தில் பேசப்படுகிற மனித உரிமைகள் இறைவனால் வழங்கப்பட்ட உரிமைகளாகும். அவை ஏதோ ஒரு அரசாலோ, சட்ட மன்றத்தினாலோ வழங்கப்பட்டவையல்ல. மன்னர்கள் அல்லது சட்ட மன்றங்கள் வழங்கும் உரிமைகள் ஒரு காலத்தில் ரத்து செய்யப்பட்டு விடலாம். சர்வாதிகாரிகளின் அரசாணையும் இவ்வாறு மாற்றப்படக் கூடியதே! அவர்களுக்கு ஒத்து வரக் கூடிய சூழலில் அதை நிறைவேற்றுவார்கள். இல்லையென்றால் விலக்கி விடுவார்கள். ஆனால் இஸ்லாத்தில் சட்ட மன்றத்திற்கும், அரசுக்கும் அறவே உரிமையில்லை. ஏனெனில் அவையனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. யாருக்கும் அவற்றைத் திரும்பப் பெறவோ, மீறவோ, மாற்றவோ அதிகாரமில்லை.

வெற்றுத் தாளில் எழுதி வீண் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்ற உதவாக்கரை ஆவணங்களல்ல அவை. வெளிச்சம் போட்டுக் காட்டிய பின் நடைமுறை வாழ்வில் அமல்படுத்தாமல் பதுக்கும் சட்டங்கள் அல்ல அவை. உருப்படாத தத்துவங்கள் அல்ல அவை. அமுல்படுத்துவதற்கு இசைவான இல்லாத வறட்டுக் கொள்கைகள் அல்ல அவை.

ஐக்கிய நாட்டுப் பேரவை அதனுடைய பிரகடனம், அது எடுத்த தீர்மானம், வழங்கிய மனித உரிமைகள் இறைவன் அருளிய மனித உரிமைகளோடு ஒப்பிடக் கூடியவை அல்ல. ஏனெனில் இறைவன் வழங்கிய மனித உரிமைகள் இஸ்லாமிய நம்பிக்கையின் பிரிக்க முடியா அங்கமாகும். ஒவ்வொரு முஸ்லிமும், தன்னை முஸ்லிம் என வாதிடும் ஆட்சியாளனும் இவற்றைக் கண்டிப்பாக ஒப்புக் கொண்டு அங்கீகரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இறைவன் வழங்கிய இவ்வுரிமைகளை மாற்றினாலோ, திருத்தினாலோ, மறுத்தாலோ, வெறும் வாய் வேதாங்களைப் பேசினாலோ, அமுல்படுத்தத் தவறினாலோ குர்ஆன் எச்சரிப்பதைப் பாருங்கள் :

எவர்கள் அல்லாஹ் அருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள். (5:44)

இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்

உயிர் மற்றும் உடமைப் பாதுகாப்பு :

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரைப் பறிக்கக் கூடாது.
முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.

மனித மாண்பின் பாதுகாப்பு :

குர்ஆன் கூறுகிறது :

ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்யாதீர்கள்
அவதூறு கற்பிக்காதீர்
பட்டப் பெயர் சூட்டி இழிவு படுத்தாதீர்
புறங்கூறாதீர், தரக் குறைவாகப் பேசாதீர்

தனிநபர் வாழ்வும் புனிதமும் :
உளவு பார்க்காதீர்
உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்

தனிநபர் சுதந்திரம் :

எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமாகாத வரை, அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஒருவரைப் பாதுகாத்துக் கொள்ள வாய்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதியளிக்கவில்லை.

கொடுங்கோண்மைக்கு எதிராக பாதுகாப்பு :

இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் ஒன்று அரசுக் கொடுங்கோண்மைக்கெதிரான பாதுகாப்பாகும்.

குர்ஆன் கூறுகிறது :

தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர் பேசலாம். (4:148)

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. மனிதனுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரதிநிதிக்குரிய அதிகாரமே! அடைக்கலமாக அளிக்கப்பட்ட அதிகாரமே ஆகும்.

இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர், மக்களின் முன் தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.
இதனை உறுதிப்படுத்தி அபூபக்ர் (ரலி) அவர்கள் பதவியேற்ற பின் தம்முடைய முதல் உரையில் கூறுகிறார் :

நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள் நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள். இறைவனின் - இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழிதவறி நடந்தால் எனக்குக் கீழ்ப்படிய வேண்டாம்.

கருத்துச் சுதந்திரம் :

குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இஸ்லாம் முழு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை, ஒழுக்க மேம்பாட்டிற்கு வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங்கோண்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலாகாது.

கருத்துச் சுதந்திரம் பற்றி மேலைநாட்டினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தை விட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் சிறப்பானது. எந்தக் காரணத்தாலும் தீமைகள், அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதியளிப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி தாக்குதல், அத்துமீறல்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இறையானை ஏதேனும் உள்ளதா என்று முஸ்லிம்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை விசாரிப்பது வழக்கம். அப்படி இறைக்கட்டளை எதுவும் வெளியாகவில்லை என்று நபிகளார் கூறினால், முஸ்லிம்கள் வெளிப்படையாக மனம் விட்டுத் தத்தமது கருத்துக்களைக் கூறுவார்கள்.

கூடிவாழும் உரிமை :

கட்சி, மன்றங்கள் அமைத்து மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும். இந்த உரிமைகளம் ஒரு சில பொதுநல விதிகளுக்குட்பட்டே இருக்க வேண்டும்.
தீர்மானிக்கும் உரிமை :

இஸ்லாம் கூறுகிறது :

இறைமார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. (2:256)

சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இலலை. அரசிற்கு அளிக்கப்படும் வரையற்ற அதிகாரங்கள், மனித அடிமைத் தனத்தையும், கீழ்மையையம் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை அமலில் இருந்தது. இப்பொழுது அத்தகைய அடிமை முறை சட்டபூர்வமாக ஒடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வாதிகார அமைப்பு விதித்துள்ளதை நாம் கண்கூடாகவே பார்க்கலாம்.

சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு :

சுய தீர்மான உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை இஸ்லாம் வலியுறுத்துகிற அதே நேரத்தில் தனிநபரின் உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவறவில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் கூடாது. எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு :

வேரொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது :

ஒருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்க மாட்டார்கள். (6:164)

வாழ்வாதார அடிப்படைக்காக உரிமை :

தேவையள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. அவர்களுக்கு உரிய நியாயமான தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

இறைவன் கட்டளையிடுகிறான் :

அவர்களின் சொத்தில் வறியவர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உரிமையுண்டு. (70:15)

சட்டத்தின் முன் அனைவரும் சமம் :
சட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிபூரண முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.

ஆட்சியாளர் விதிவிலக்கல்ல :

ஓர் உயர்ந்த வம்சத்துப் பெண் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள். அந்த வழக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். அப்பொழுது முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமானியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக் குடி மக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்க விடுவார்கள். என் ஆத்மா யார் கைவசம் இருக்கிறதோ, அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறைச் செய்தாலும் நான் அவர் கையைத் துண்டிக்காமல் விட மாட்டேன்.

அரசின் விவாகரங்களில் கலந்து கொள்ளும் உரிமை :

அவர்கள் பணிகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை மூலமாகவே (நடைபெறும்). (42:38)

ஆலோசனை சபை அல்லது சட்டமன்றம் என்பதன் கருத்து இது தான் :

அரசின் தலைவர், மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக, சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சட்டபூர்வ பாதுகாப்பினை நல்கி மேற்கூறிய மனித உரிமைகளைச் சாதிப்பதில் இஸ்லாம் நாட்டும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, மிருக இயல்புகளை விட்டும் வெளியேறி, மனித மாண்புளை மேற்கொள்ள வேண்டும். இரத்த பந்தம், இன மேன்மை, மொழி வெறி, பொருளாதார மேலுரிமை போன்ற குறுகிய வட்டங்களை விட்டுப் பரந்த நோக்கின் பால் வர வேண்டும். அந்தரங்க சுத்தியோடு சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ வேண்டும் என இஸ்லாம் மனித குலத்திற்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறது!

வட்டி (ஒரு சமூகக் கொடுமை)

வட்டியினால் ஏற்படும் தீமைகள்.!!!!, வட்டி என்றால் என்ன.?, வட்டியைப் பற்றி இறைவனும் அவனது தூதரும்.


வட்டி

நாம் வாழும் பூமி, கண்கள் காணும் மேகம், வானம், நாம் சுவாசிக்கும் காற்று, சுவையாக உண்ணும் பொருட்கள், பருகும் நீர்... இப்படி மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் படைத்த இறைவன். அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் கற்றுத் தந்து, எதை எல்லாம் மனிதன் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவாக்கி விட்டான். அத்தோடு விட்டுவிடாமல் அவன் காட்டித் தந்தவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக இம்மனித குலத்திலிருந்து பல புனிதர்களைக் காலத்திற்கேற்ப, தேவைக்கேற்ப தன்னுடைய தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினான்.


உலகில் முதல் மனிதரும், முதல் இறைத்தூதருமான ஆதம் (அலை) அவர்களை அனுப்பும் போது, நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கி விடுங்கள், என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும் போது யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:38

மேற்கண்டவாறு கூறியே இறைவன் அனுப்பினான். அதே போன்று அதற்கடுத்த காலங்களில் நூஹ்(அலை) அவர்கள் ஸாலிஹ் (அலை) அவர்கள், அய்åப்(அலை) அவர்கள், இன்னும் இவர்களைப் போன்ற இறைத்தூதர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலங்களில் இறைவனால் அனுப்பப்பட்டார்கள்.

ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும் அனுப்பப் பட்ட அந்த இறைத்தூதர்கள் இறைவன் ஏவியபடியே அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்பதையும், இன்னும் அந்த மக்கள் செய்து வந்த அக்கிரமங்களை விட்டும் விலக வேண்டுமென்பதையும் தெளிவுபடுத்தி எச்சரித்தார்கள். அந்த நபிமார்கள் வரிசையில் நபி ஷூஐபு (அலை) அவர்களை மக்கள் பொருளாதாரக் குற்றங்களில் மூழ்கிக்கிடப்பதை எச்சரித்துச் சீர்செய்ய அல்லாஹ் அனுப்பினான்.

பொருளாதாரத்தின் மீது மனிதன் கொண்ட பேராசை அன்றே அவனை மோசடி செய்யத் தூண்டியது என்றால் இன்றைய உலக சூழலில் மனிதன் எந்த அளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவான். அது அவனை எந்த அளவிற்கு இழிவு படுத்தி விடும் என்பதால் இறைவன் தனது இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலம் இறுதி நாள் வரை ஒத்துவரக் கூடிய மாபெரும் கரு¥லமான திருக்குர்ஆனை அருளினான்.

அப்புனித திருமறையின் பொருளாதாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது அது எந்த அளவிற்கு அவசியமானது என்பதையும், அதை மனிதன் தேடிக் கொள்ளும் வழிமுறைகளையும், அதை அவன் பங்கிட்டு வாழும் திட்டத்தையும் அதனால் அவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தையும் குறிப்பிட்டதோடு இறைவன் கூறியிருக்கும் அப்பொருளாதாரத் திட்டத்திற்கு மாற்றமான வேறொரு திட்டத்தை மனிதன் வகுக்கும் போது விளையும் தீங்குகளையும் இறைவன் தெளிவு படுத்தி விட்டான். அப்படி இறைவனால் தடுக்கப்பட்ட பொருளாதாரத் திட்டங்களில் ஒன்று தான் வட்டி. இறைவனால் தடுக்கப்பட்ட இந்த வட்டி முறை பொருளாதாரத்தை மனிதன் கையாண்டால் அவன் ஈருலகிலும் பெரும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும் இறைவன் தெளிவுபட எச்சரித்திருக்கிறான்.




வட்டி என்றால் என்ன?

பொருள் கொடுத்தவன் தன் பொருளைத் திரும்பப் பெறும் வரையிலோ அல்லது திரும்பப் பெறும் போதோ அல்லது தவணை முறையிலோ தான் கொடுத்துள்ளவற்றுக்கு அதிகமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டி எனப்படும்.

பொருளைக் கொடுப்பவர், தான் கொடுத்த அளவு மட்டும் வாங்குதல் கடன் எனப்படும். அதிகமாக வாங்குவது வட்டியாகும் என்று கூறும் போது சிலர் நாங்கள் வாங்குவது வட்டியல்ல. அவருக்குக் கிடைக்கும் லாபத்தில் பங்குதான் வாங்குகிறோம் என்று கூறுவர். இது பங்கு வாங்குதலாகாது. அப்படியானால் இலாபத்தில் எவ்வாறு பங்கு வாங்குகின்றோமோ அதே போன்று நட்டத்திலும் பங்கு கொள்ள வேண்டும் அல்லவா?

அப்படி லாபத்திலும், நட்டத்திலும் பங்கு கொண்டால் வாங்கப் படும் தொகை வட்டியாகாது. ஆனால் வட்டி வாங்குபவர்கள் எவ்வித உழைப்புமின்றி லாபத்தில் மட்டும் பங்கு பெறுகிறார்கள். பணம் வாங்கி அதற்கு வட்டி செலுத்துபவன் பெரும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டாலும் கூட வட்டி வாங்குபவர்கள் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள்! இலாபத்தில் மட்டும் பங்கு கொள்வோம் என்ற அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் அனைத்துமே வட்டியாகத் தான் கருதப்படும்.


வட்டியினால் ஏற்படும் தீமைகள்

வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை இறைவன் தடை செய்துள்ளானே, அது அப்படி என்னதான் தீமைகளைக் கொண்டது என்பதை நாம் ஆராயும் போது, அதனால் ஏற்படும் தீமைகளுக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.

எத்தனையோ கிராமப்புறங்களில் வாங்கிய தொகைக்கு வட்டி கொடுக்க முடியாத பெண்கள் அதற்கு ஈடாகத் தம் மானத்தையே இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதே போன்று எத்தனையோ அப்பாவி ஆண்கள் வட்டி கட்ட முடியாததால் தன் மனைவியையோ அல்லது தன் வீட்டிலுள்ள மற்ற நபரையோ அந்தப் பணத்திற்கு ஈடாக வைத்து அந்தப் பணத்தைச் செலுத்திய பின்னரே அவர்களை மீட்டிக் செல்லும் அவல நிலையை இன்றும் பல கிராமங்களில் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இதில் மானத்திற்கு அஞ்சியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமைகளையும் காண முடிகிறது. மேலும் தொழில் நடத்தலாம் என்ற நோக்கத்தோடு வட்டிக்குப் பணம் வாங்கியவர்கள் வட்டி கட்ட முடியாமல் தங்கள் தொழில் நட்டப்பட்டு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப் படுவதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வட்டி அடிப்படையில் கடன் வாங்கிய எத்தனையோ நாடுகள், தான் வாங்கிய கடனுக்கு மேல் பல மடங்கு அதிகமான வட்டி கொடுத்த பின்னரும் தான் கடனாக வாங்கிய தொகை குறையாமல் அப்படியே இருப்பதைக் கண்டு வருந்துவதைக் காண்கிறோம். இவ்வாறு வட்டியினால் ஏற்படும் கொடுமைகளுக்கும் கேடுகளுக்கும் அளவே இல்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டது.


வட்டியைப் பற்றி இறைவனும் அவனது தூதரும்

வட்டி என்றால் என்ன, எந்த அளவிற்கு மனித குலத்திற்குத் அது தீங்கை விளைவிக்கின்றது என்பதை எல்லாம் நாம் கவனித்த பின்பு மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டிய இறைவனும், இறைத்தூதரும் இது பற்றிக் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு முஸ்லிம் உலகில் என்ன செய்தாலும், தான் செய்யக்கூடிய அச்செயலைத் திருக்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்கள் வாழ்வினிலும் ஒப்பிட்டுப்பார்த்த பின்பே செயல்படுத்த வேண்டும். வட்டி முறைப் பொருளாதாரத்தை நாம் அவ்வாறு காணும்போது அது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகவே தெரிய வருகிறது.

(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. அல்குர்ஆன் 30:39 கடன் கொடுத்தவன் தான் கொடுத்துள்ளதைத் திரும்பப் பெறும் போதோ, அல்லது திரும்பப் பெறும் வரையில் தவணை முறையிலோ தான் கொடுத்துள்ள அதே இனப் பொருளைக் கொடுத்ததற்கு அதிகமாக வாங்குவது வட்டியாகும்.

குறிப்பிட்ட பொருளைக் கொடுத்து விட்டுத் திரும்பப் பெறும் போது அதிகமாக வாங்கினால் தான் வட்டி என்று பொருளல்ல. மேற்குறிப்பிட்ட வசனத்தில் இன்னபொருள் என்று குறிப்பிடாமல் பொதுவாக பொருட்கள்(அம்வால்) என்று கூறப்பட்டுள்ளது. எனவே பணம் தான் என்றில்லாமல் எந்தப் பொருளைக் கொடுத்தாலும் அதைத் திரும்ப பெறும் போது கூடுதலாக வாங்கி விட்டால் அது வட்டியாகி விடும் என்பது தெளிவாகிறது. இதைப் பற்றி நபி(ஸல்) அவாகள் கூறுகையில்

''தங்கத்தைத் தங்கத்திற்குப் பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்குப் பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக் கோதுமைக்குப் பதிலாகவும், தொலிக் கோதுமையைத் தொலிக் கோதுமைக்கு பதிலாகவும், பேரித்தம் பழத்தைப் பேரீத்தம் பழத்திற்குப் பதிலாகவும், உப்பை உப்பிற்குப் பதிலாகவும் சம எடையில் விற்றுக் கொள்ளுங்கள். இவ்வினங்கள் மாறுபடுமானால் கரத்திற்குக் கரம் நீங்கள் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்கள். அறிவிப்பவர்: உபதத்துப்னு ஸாமித்(ரலி) நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த ஆறு பொருட்களில் தான் வட்டி வாங்கலாகாது. நெல், சோளம் போன்ற ஏனைய பொருட்களில் வட்டி கூடும் என்று வாதிட முடியாது. ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் உதாரணத்திற் காகவே சில பொருட்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்களே தவிர இவற்றில் மட்டும் தான் வட்டி வாங்கலாகாது என்ற அர்த்தத்தில் இல்லை. அப்படி ஒரு அர்த்தத்தை நாம் எடுத்தால் அந்த ஹதீஸ் அல்குர்ஆனின் 30:39 வசனத்திற்கு முரண்பட்டு விடும். குர்ஆனிற்கும் ஹதீஸ்களுக்கும் ஒருபோதும் முரண்பாடு ஏற்படாது. அவ்வாறு முரண்படும் அர்த்தத்தை நாம் எடுக்கவும் கூடாது.

மேலும் வட்டி வாங்குபவர்களைப் பற்றி இறைவன் தனது திருமறையில் குறிப்பிடும் போது, வட்டி வாங்கி உண்பவன் பைத்தியக்காரன், வட்டி வாங்குபவன் பெரும், குற்றவாளி, அவன் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன், அதை விட்டும் மீளாவிட்டால் நிரந்தர நரக வாசியாக அவன் ஆகிவிடுவான் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளான்.

''வட்டியை (வாங்கி) விழுங்கு கின்றவர்கள் (மறுமை நாளில் இறைவனால் எழுப்பப்படும் போது) ஷைத்தான் பிடித்த பைத்தியக் காரன் எழும்புவது போலன்றி (வேறுவிதமாக) எழும்ப மாட்டார்கள். ஏனென்றால் வணிகமும் வட்டியைப் போன்றது தான்(எனவே வட்டி வாங்குவது தவறில்லை) என இவர்கள் கூறியதுதான் இதற்குக் காரணம்.

ஆனால் அல்லாஹ் வணிகத்தை ஆகுமானதாக்கி வைத்து வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான். ஆதலால் இறைவனிடமிருந்து வந்த (இந்த) எச்சரிக்கைப் படி (அதை விட்டும் முழுமையாக) விலகிக் கொண்டால் (அதற்கு) முன்பு (அவன் வட்டியாக வாங்கிச்) சென்றது அவனுக்குரியதே. (இதற்கு முன்பு வட்டி வாங்கிய) அவனுடைய விடயம் அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது. (அல்லாஹ்வின் எச்சரிக்கை வந்த பின் வட்டி வாங்குவதை விட்டு விட்டால் அல்லாஹ் அவனை மன்னித்தும் விடலாம்) தவிர (இந்த எச்சரிக்கை கிடைத்த) பின்னரும் எவரேனும் வட்டி வாங்க முற்பட்டால் அவர்கள் நரக வாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அல்குர்ஆன் 2:275

மேற்கண்ட வசனத்தில் வட்டி வாங்குவது தடுக்கப்பட்டது என்பதை அறிவிப்பதோடு, இக்கடுமையான எச்சரிக்கைக்குப் பின்பும் வட்டி வாங்க முற்படுவர் நரகவாசி என்றும் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் இதில் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இறைமறுப்பாளர்கள், இணைவைப்பவர்கள் ஆகியவர்களைப் பற்றி நரகவாசிகள் என்ற கூறும் போது ''ஹூம்ஃபீஹா காலிதூன்'' (அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள்) என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்தியிருக்கிறான். அதே வாசகத்தைத் தான் இங்கு வட்டி வாங்குபவர்களை எச்சரிக்கும் போதும் கூறியிருக்கிறான். அப்படியானால் வட்டி வாங்குவது எந்த அளவிற்குக் கொடிய பாவம் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியலாம்.

இக்கொடிய பாவத்தைப் பாவம் என்ற அறிந்த மறுகணமே அதை விட்டு விலகுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும். அப்படி அவன் மீளவில்லையென்றால் அவன் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் எதிர்த்துப் போரிடுபவன் என்று அதே அத்தியாயத்தில் அடுத்து வரும் வசனங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அறியாமை காலத்திலிருந்தே பன} அம்ர் இப்னி உமைர் எனும் குடும்பத்தார் பனு முஙைரா எனும் குடும்பத்தார்களுக்குத் தங்கள் பொருட் களைக் கொடுத்து வட்டி வசூலித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இரு குடும்பத்தாரும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டனர். அதன் பின்னரும் அவர்கள் முன்னர் போன்று வட்டி வசூலித்து வந்தனர் பின்னர் வழக்கம்போல் பன} அம்ர் பின் உமைர் குடும்பத்தார் பன} முஙைரா குடும்பத்தாரிடம் வட்டி வசூலிக்கச் சென்றனர். ஆனால் பன} முஙைரா குடும்பத்தார், ''அல்லாஹ் விசுவாசிகளை விட்டும் வட்டியை அகற்றி விட்டான். எனவே நாங்கள் இஸ்லாத்தில் இருந்து கொண்டு வட்டி கொடுக்க மாட்டோம்'' என்று வட்டி கொடுக்க மறுத்து விட்டனர்.

அவர் வசூலிக்க வந்த வட்டித்தொகை, வட்டி ஹராம் என்று அருளப்படுவதற்கு முன்பே பன} முஙைரா கொடுக்க வேண்டிய தொகை. எனவே தான் அவர் வசூலிக்க வந்தார். இதற்கு மாறாக வசனம் அருளப்பட்ட பின்பும் வட்டி வாங்க அவர்கள் புறப்பட வில்லை. என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தனக்குப் பெருமளவு வட்டித்தொகை வரவேண்டியதாக இருந்ததால் பன}அம்ர் பின் உமைர் குடும்பத்தினர், ''அல்லாஹ் இப்போது தானே வட்டியை ஹராமாக்கியுள்ளான். இதற்கு முன்பே எங்களுக்கு நீங்கள் தர வேண்டிய பாக்கித்தொகை உள்ளதே. எனவே நீங்கள் அதனைக் கொடுப்பது தானே நியாயம்'' என்று வாதிட்டனர்.

அப்போது உஸைத்(ரலி) அவர்களை மக்கா மாநகரின் அதிகாரியாக நபி(ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள். பன}அம்ர் பின் உமைர் குடும்பத்தாரின் வழக்கு அங்கு கொண்டு வரப் பட்டது. அவர்களின் இவ்வழக்கில்தான் தீர்ப்புக் கூறாமல், அதன் விபரங்களை முழுமையாக எழுதி நபி(ஸல்) அவர்களிடம் உஸைத் (ரலி) தீர்ப்புக் கேட்டார்கள்.

அப்போது அல்லாஹ் திருமறையின் இரண்டாவது அத்தியா யத்திலுள்ள 278, 279 ஆகிய இரு வசனங்களையும் அருளினான், பன} அம்ர் பின் உமைர் இவ்வசனங்களைக் கேள்விப்பட்ட உடன் நாங்கள் தவ்பா செய்கின்றோம் என்று கூறி மீதமிருந்த வட்டித் தொகையை வாங்காமல் விட்டு விட்டனர்.

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களாக இருப்பின் அல்லாஹ்விற்குப் பயந்து வட்டியில் (இதுவரை வாங்கியது போக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளாவிட்டால் இறைவனும், அவனுடைய தூதருடனும் யுத்தம் செய்யத் தயாராகுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி மனம் வருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் (அவ்வாறே) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். அல்குர்ஆன் 2:278, 279

இவ்வசனங்களின் மூலமும் மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமும் வட்டி வாங்குபவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிடுபவர்கள் என்பதை உணரலாம். எனவே நம்மிடம் எவ்விதத்தில் வட்டி தலையிட்டாலும் அதை வேரோடுப் பிடுங்கி எறிந்திட வேண்டும். இதை அறிந்த பின்னரும் தன்னைத் திருத்திக் கொள்ளாதவன் நிச்சயம் தண்டிக்கப் படுவான். இதில் துளியும் சந்தேகமில்லை.

எவரிடமும் வட்டி வாங்கலாகாது

(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்களது பொருள்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. அல்குர்ஆன் 30:39

ஏழைகள் வறுமையின் கொடுமையைப் போக்குவதற்கு வாங்கும் கடனுக்கோ, நோயாளிகள் நோயைப் போக்க வாங்கும் கடனுக்கோ வட்டி வாங்குவது தான் குற்றம். வணிகம், விவசாயம் போன்ற தொழில் ரீதியான கடன்களுக்கு வட்டி வாங்கலாம் என்பது சிலருடைய கருத்தாகவும் இருந்துவருகிறது. இது தவறான கருத்தாகும். ஏனெனில் வட்டி வாங்கலாகாது என்று இறைவன் கூறும் போது இன்னாரிடம் வட்டி வாங்கலாகாது என்று இனம் பிரித்துக் கூறாமல் 'அன்னாஸ்' மனிதர்கள் என்றுதான் கூறியுள்ளான்.

இன்ன மொழிக்காரனிடம் இன்ன இனத்தவரிடம் இன்ன நாட்டுக்காரனிடம் இன்ன நிறத்தவனிடம் என்று கூறாமலிருப் பதால் மனிதனாகப் பிறந்த எவனிடமும் வட்டி வாங்கலாகாது. அப்படி வாங்கினால் அது குற்றம் என்பதை 30:39 வசனம் நமக்குத் தெளிவு படுத்துகிறது.

குற்றத்தில் சமமானவர்கள்

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள். அறிவிப்பவர் ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்

வட்டி கொடுப்பவன் கொடுத்தால் தான் வட்டி வாங்குபவன் அதை வாங்குவான். எனவே வட்டி வாங்குபவன், வட்டி கொடுப் பவன் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என இஸ்லாம் கூறுகிறது. எழுதுபவன் சாட்சியானவர்கள் ஆகியோர் இவர்கள் செய்யும் குற்றத்திற்குத் துணை போனதால் அவர்களையும் இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. மேலும் தெரிந்து கொண்டே அக்குற்றத்தைச் செய்வதால் அனைவரும் குற்றத்தில் சமம் என்றும் தீர்ப்பளிக்கின்றது இஸ்லாம். எனவே வட்டி வாங்கக் கூடாது என்பது மட்டுமல்லாமல் வட்டிக்காக எவ்விதத்திலும் துணையும் நிற்கலாகாது என்பதையும் மனதில் அழமாகப் பதித்திட வேண்டும்.

இன்று வங்கிகளில் வேலை செய்யும் முஸ்லிம்களைப் பார்க் கின்றோம். அவர்கள் இச்சட்டத்தைப் பற்றி நினைப்பது கூட இல்லை போலும். எனவேதான் அவர்கள் அவ்வேலையைச் செய்து அழிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய உலகில் வட்டியில்லா வங்கிகள் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எங்கும் இல்லை. எனவே வட்டி முறையைக் கொண்டு இயங்கும் வங்கிகளில் வேலை பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. எங்கேனும் வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்காத வங்கிகள் இருக்குமானால் அதில் வேலை செய்யலாம். இஸ்லாம் அதைத் தடுக்கவில்லை. வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி முதல் வட்டித் தொடர்பான வேலை செய்யும் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் தான். எனவே வட்டி முறையில் இயங்கும் வங்கிகளில் எவ்விதப்பணியும் மேற்கொள்ளக் கூடாது என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

அடமானம்

வங்கிகள், பொது நிதி நிறுவனங்கள், அடகுக் கடைகள் பொருட்களைப் பெற்று அதற்குக் கடன் வழங்குவதை நாம் காணலாம். வழங்கப்படும் அக்கடன் தொகைக்கு அவர்கள் வட்டியும் வாங்குகின்றனர். சில தனி நபர்களும் இவ்வாறு செய்து வருகின்றனர். அடமானமாக வாங்கும் அப்பொருளைச் சிலர் உபயோகித்துக் கொண்டும் அதற்கு வட்டி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இது சம்பந்தமாக இஸ்லாம் கூறும் தீர்வை நாம் காண்போம்.

நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடவேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு åதரிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாகக் கொடுத்து உணவுப் பொருள் களைக் கடனாகப் பெற்றார்கள். நூல்: புகாரி, முஸ்லிம் ''சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்று) செலவுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப் பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையேதான் செலவு சார்ந்திருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட இறைவசனம், ஹதீஸ்களின் அடிப்படையில் பயணத்திலும் பயணம் அல்லாத காலத்திலும் பொருட்களை அடமானம் வைத்துக் கடன் பெறலாம் என்பது தெளிவாகிறது. ஆனால் அடமானமாகப் பெற்ற பொருளைக் கொண்டு இலாபம் எதுவும் அடையக் கூடாது. ஆனால் அடமானமாகப் பெற்ற பொருளுக்கு ஏதேனும் செலவு செய்தால் அந்த செலவுக்குத் தக்கவாறு அதைப் பயன் படுத்தலாம்; அல்லது அதற்குரிய செலவை அதன் உரிமை யாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம். அதற்கு மாறாக அதனைக் கொண்டு எவ்விதத்தில் பயன் பெற்றாலும் அது வட்டியாகி விடும் என்ற கவனத்தோடு செயல்படல் வேண்டும்.

ஒத்தி

ஒத்தி என்ற பெயரில் வீடு, கடை போன்றவற்றை வாங்குவ தும், அடமானப் பொருளை வாங்குவது போன்றுதான். எனவே அதிலும் நாம் எந்த உழைப்பும் ஊதியமுமின்றிப் பயன் பெற்றால், பயனாகப் பெற்றது வட்டியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
அடமானமாகப் பொருளைக் கொடுப்பது என்பது கடன் வாங்குபவன் தான் வாங்கும் கடனுக்கு உத்திரவாதமாகத்தான் அப்பொருளைக் கொடுக்கிறானே தவிர, கடன் கொடுப்பவன் பயன்படுத்துவதற்கல்ல. யாராவது இரு நபர்களைச் சாட்சியாக வைத்து நாம் ஒருவருக்குக் கடன் கொடுத்தால், சாட்சிக்காக வந்தவர்களைப் பயன்படுத்தி நாம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா? அல்லது அந்த சாட்சியாளர்கள் தான் சம்மதிப்பார்களா என்பதை நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்; அல்லது அது போன்று எவராவது நம்மைப் பயன்படுத்தினால் நாம் தான் அதை ஏற்போமா? ஒத்தியாக கடையோ, வீடோ நாம் வாங்கிக் கொண்டு, அதன் மூலம் பயனை அனுபவிப்பது என்பது வட்டிப் பணத்தை வாங்குவதற்குப் பதிலாக வாடகையில் கழிப்பதாகும். எனவே இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றே!

தவணை முறையில் பொருட்கள் வாங்குதல்

தவணை (ஐளெவயடட அநவெ ) முறையில் பணம் கட்டுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு இன்று பல வணிக முறைகள் கையாளப் படுகின்றன. இதைப் பயன்படுத்தி அதனை விற்பவர்கள் வட்டி முறையில் பணம் சம்பாதிக்கின்றனர். தவணை முறைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று ரொக்கமாகப் பணம் கொடுத்து வாங்கினாலும் தவணை முறையில் பணம் கட்டுவதாகக் கூறி வாங்கினாலும் பொருளுக்குரிய விலையை ஒரே விலையாக வைத்து விற்பது. இதில் யாருக்கும் எவ்வித நட்டமும் இல்லை. இது மார்க்கத்தில் ஆகுமானது.

மற்றொன்று ரொக்கமாகப் பணம் செலுத்தி வாங்கினால் ஒரு விலையாகவும், தவணை முறையில் பணம் செலுத்துவதாகக் கூறி வாங்கினால் ஒரு விலையாகவும் அதாவது காலத் தவணைக்குத் தக்கவாறு (அதிகமான) விலை வைத்து விற்பது இந்த முறைப்படி விற்பது வட்டி முறையாகும். எனவே இம்முறை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். ''பொருள்கள் மாறுபட்டால் கரத்திற்குக் கரம் நீங்கள் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபைததுப்னுஸ் ஸாமித்(ரலி) நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸில் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளி, பணத்திற்குப் பதிலாகப் பொருள் என்று மாறுபட்டால் கூட்டியோ, குறைத்தோ எப்படி விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அது உடனுக்குடன் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே தவணைமுறையில் பொருட்கள் கொடுக்கல், வாங்கல் செய்யும் போது காலத்தை அடிப்படையாக வைத்து அதன் விலையைக் கூட்டிக் குறைத்துக் கணக்கிட்டுக் கொடுத்தால் அது வட்டியாகி விடும் என்பது தெளிவாகிறது. எனவே இந்த வியாபார முறையும் தவிர்க்கப் பட வேண்டியதே என்பதில் துளியளவும் ஐயமில்லை. வட்டி என்பதே காலத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்வது தான். எவராவது நம்மிடம் வந்து இப்போது நூறு ரூபாய் தருகிறேன் நீ எனக்கு நூற்றி இருபது உடனடியாகக் கொடு என்று கேட்டால் கொடுப்போமா?. காலத்தை அடிப்படையாக வைத்துத்தானே கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதைப் போன்றுதான் தவணை முறையிலும் காலத்தை அடிப்படை யாகக் கொண்டு கூடுதலாக வசூலிக்கப் படுகிறது என்பதை அறியவும்.

ஏலச்சீட்டு

சில இயக்கங்களில் சங்கத்தின் பணத்தையோ, பள்ளிவாசல் போன்ற பொது நிறுவனங்களுக்குச்,சொந்தமான பணத்தையோ ஏலம் விடுவதைக் காணலாம். அதில் அவர்கள் கையாளும் முறை வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு சங்கத்தினுடைய பணம் ரூபாய். 10,000, ஏலம் விடப்படுகிறது என்றால், அந்தத் தொகையை யார் மிகவும் குறைத்து கேட்கின்றாரோ அவருக்குக் கொடுக்கப்படும். அவர் அதைத் திரும்ப செலுத்தும் போது ரூபாய் 10,000ல் எதுவும் குறைக்காமல் முழுவதுமாகச் செலுத்த வேண்டும். இது மாதிரியான ஏலம் இஸ்லாமிய அடிப்படையில் தடுக்கப்பட்டது என்பதில் துளியளவும் ஐயமில்லை. இந்தப் பணம் பொது நிறுவனத்திற்குத்தானே போய்ச் சேர்கிறது? இதனால் பலர் நன்மையடையும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? எனவே இதை ஒரு நன்கொடை போன்றும் எடுத்துக் கொள்ளலாமல்லவா என்று சிலர் எண்ணலாம்.

பொது நிதியிலிருந்து ஒருவன் பணம் பெற வருகிறான் என்றால் அவன் உதவி கேட்டுத்தான் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். உதவி கேட்டு வரும் அவனுக்கு மேலும் உபத்திரத்தைக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். சரி ஏலமாகக் கேட்டு வாங்கிய அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தொழில் செய்யும் போது அதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டால், இந்தப் பொது நிறுவனங்கள் பணம் வாங்கிய அவனை விட்டு விடுமா என்றால் அதுவுமில்லை!

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கடன் கொடுக்கல், வாங்கல், பொது நிதிப் பங்கீடு எல்லாம் நடந்திருக்கிறது.

அவர்கள் இது போன்ற முறையைக் கையாண்டார்களா? என்று பார்த்தால் இல்லை என்றே தெரிகிறது. பின்பு நாம் ஏன் நம் இஷ்டத்திற்கு வட்டி முறையைக் கொண்ட இச்செயலைச் செய்து பாவியாக வேண்டும் என்பதை நன்கு சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குலுக்கல் சீட்டு

சில இடங்களில் குலுக்கல் சீட்டு நடத்தும் பழக்கம் உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சில நபர்கள் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட தொகையை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை என்று அனைவரும் செலுத்தி அவர்கள் அனைவரின் பெயர்களையும் துண்டுச் சீட்டுக்களில் எழுதி, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு அத்தொகையைக் கொடுத்து விடுதல் என்பது தான் குலுக்கல் சீட்டு எனப்படும். இதில் பல முறைகள் உண்டு. அதில் மார்க்கம் அனுமதிக்காத முறைகளும் உண்டு. அதனை நாம் காண்போம்.
குலுக்கல் சீட்டில் இடம் பெறுபவர்கள் 11 நபர்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் மாதாமாதம் ரூ.1000 செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் எல்லோருடைய பெயரும் குலுக்கப்படும். எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு ரூபாய் 10000 மட்டும் கொடுக்கப்படும். ரூ.1000 கம்பெனி எடுத்துக் கொள்ளும் இதில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமன்றி அவ்வப் போது யாரும் சேர்ந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூறுவதானால் லாட்டரி சீட்டு நடத்துவது போன்றதுதான் இது. வட்டி வகையைச் சாராது சூதாட்ட வகையைச் சார்ந்ததாகும். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றாகும். முதல் மாதச்சீட்டை கம்பெனியே எடுத்துக் கொள்ளும். எனவே முதல்சீட்டு குலுக்கப்படாது. பின்னர் ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். இரண்டாவது மாதம் எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ, அவருக்கு 11,000ல் மிகக் குறைந்த குறிப்பிட்ட தொகை மட்டுமே கொடுக்கப்படும். அதற்கடுத்த மாதங்களில் அவர் பணம் கட்ட வேண்டியதில்லை. குலுக்கலில் அவரது பெயரும் இடம் பெறாது.
இது போல் இரண்டாவது மாதக் குலுக்கலில் எவரது பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு முதல் மாதக் குலுக்கலில் இடம் பெற்றவருக்குக் கொடுத்த தொகையை விடக் கொஞ்சம் அதிகத் தொகை கொடுக்கப்படும். மீதித் தொகையைக் கம்பெனி எடுத்துக் கொள்ளும்.
அவர் அன்றோடு ஒதுங்கிக் கொள்வார். இதே போன்று தொடர்ந்து குலுக்கல் நடந்து கொண்டேயிருக்கும். இறுதியாக எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கு ரூ.11000-த்தை விடக் கொஞ்சம் அதிகமான தொகை கொடுக்கப்படும். இந்த முறை வட்டியையும் சூதாட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டிருப்ப தால் இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்றாகும். முதல் மாதச்சீட்டு குலுக்கலைப் பொறுப்பேற்று நடத்து பவருக்கு, அவரும் மாதாமாதம் தனக்குரிய பங்கைச் செலுத்தியாக வேண்டும். அதற்கடுத்து ஒவ்வொரு மாதமும் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முழுத் தொகையும் கொடுக்கப்படும். எதுவும் குறைக்கப்படாது. அவருடைய பெயர் குலுக்கலிலிருந்து எடுக்கப்படும். ஆனால் அவர், தான் செலுத்த வேண்டிய பங்கைச் செலுத்திக் கொண்டே இருப்பார். இறுதியாக எவருடைய பெயர் இடம் பெறுகிறதோ அவருக்கும் அதே தொகை தான் கொடுக்கப்படும். கூடுதலாக எதுவும் கொடுக்கப்படாது. இது மாதிரியான குலுக்கல் மார்க்கத்திற்குட் பட்டதாக இருப்பதால் இதில் பங்கு கொள்ளலாம் தவறில்லை.

குலுக்கல் சீட்டு இன்னும் பல வகையாக இருக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வட்டி., சூதாட்டம் இல்லாத குலுக்கல் முறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

வங்கி, தபால் அலுவலகங்களில் (பணம்) சேமித்தல்


இன்று பலர் தங்களுடைய பணத்தைத் தபால் அலுவலங் களிலும் வங்கிகளிலும் சேமித்து வருவதை நாம் காண்கிறோம். இஸ்லாமிய முறைப்படி இது ஆகுமானதுதானா என்பதைச் சிந்திக்காமல் தன்னை முஸ்லிம் என்று கூறும் ஒருவர் எச்செயலிலும் ஈடுபடக்கூடாது. தபால் அலுவலகங்களில் கொடுக்கப்படும் வட்டிக்காகவே பலரும் தங்கள் பணத்தை அங்கு சேமிக்கின்றனர். இஸ்லாமிய முறைப்படி இது ஆகுமானதல்ல. வட்டி இல்லாத முறையிலான சிறு சேமிப்பு இருக்குமெனில் தாராளமாக அங்கு சேமிக்கலாம்.

வங்கிகள் வட்டி முறைப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு செயல் படுவதால் அங்கு சேமிப்பதும் ஆகுமானதல்ல.

இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பணம் வைத்திருப்போர் தங்களின் பணத்தை என்ன செய்வது? (Bank) வட்டி முறையில் இயங்குகின்றன என்று தவிர்த்தால் பணத்தைப் பாதுகாக்கும் வழி என்ன? பணத்தை கையில் வைத்திருப்பதால் கொலை செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இந்நிலை யிலிருந்து தப்பிக்க வழி என்ன என்ற சந்தேகம் சிலருக்கு எழக்கூடும். இது போன்ற நிலையில் உள்ளவர்கள் இருவிதமான நிலைகளைக் கடைப்பிடிக்கலாம்.

ஒன்று இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பலர் தொழில் தெரிந்தும், தொழில் நடத்தவதற்காக பணமின்றி இருக்கின்றனர். தொழில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பணம் முதலீடு செய்து, பிறரையும் தொழில் பங்குதாரராக்கி இலாபம் பெறலாம். தன் பொருளைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்யலாம்.

மற்றொன்று இது போன்று பணம் இருப்பவர்கள் வங்கியில் தனக்கு கணக்கு துவங்கும் போதே வட்டி வேண்டியதில்லை என எழுதிக் கொடுத்து பணத்தைப் போட்டுப் பாதுகாக்கலாம். இவ்வாறு செய்தால் வட்டி நமக்குக் கிடைக்காவிட்டாலும் நம் பணத்தில் கிடைக்கும் வட்டியை இஸ்லாத்திற்கு எதிராகப் பயன் படுத்துவோர் உண்டல்லவா என்று சிலர் கூறுவர். இங்கொரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.2 லட்சத்தை வங்கியில் செலுத்தினால் அதற்கு வட்டியாக ரூபாய்.10,000- என்று வங்கியில் வைத்துக் கொள்வோம். இதில் 2லட்சம் ரூபாய் என்பது மட்டுமே நம்பணம் என்று தெரியும் போது 10000 (பத்தாயிரம்) ரூபாய் நம் பணமாகாது என்பது தான் உண்மை. எனவே இது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.


இது போன்ற பணத்தை வைத்து அவாகள் நமக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும் இவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதற்கு மார்க்கம் அனுமதித்த முறையைத் தான் கையாள வேண்டுமே தவிர, மார்க்கம் தடைசெய்த செயலைச் செய்து பாவியாகி விடக்கூடாது. இது மட்டுமல்லாமல் இவர்களின் சூழ்ச்சியை விட இறைவனின் சூழ்ச்சி கடுமையானது என்பதால் நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதுமில்லை.

அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்வோரில் மிக மேன்மையானவன். அல்குர்ஆன் 3:54

மற்றொரு வழியையும் கையாளலாம். வங்கிகளில் நடப்புக் கணக்கு (உரசசநவெ யஉஉழரவெ) வைத்துக் கொண்டால் வட்டிப் பணம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இம்முறையை நாம் கையாண்டு வட்டியைத் தவிர்க்கலாம்.


தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் செக், டிராப்ட் போன்றவற்றை மாற்றிக் கொள்வதற்காக பேங்கில் கணக்கை துவக்குகின்றனர். இது தவறில்லை.

எந்த ஓர் ஆத்மாவிற்கும் அல்லாஹ் சக்திக்கு மீறிய கஷ்டத்தைத் தருவதில்லை என்று 2:286 இறைமறை கூறுகிறது. எனவே இது போன்ற நிலைகளுக்காக பேங்க்கில் தொடர்பு வைத்துக் கொள்வது தவறில்லை. மேலும் இவ்வாறு செக், னு.னு. மாற்றுவதில் வட்டிக்கு இடமில்லை என்பதையும் நினைவில் கொள்க. நம்மிடமிருந்து னு.னு. க்காகப் பெறப்படும் பணம் (கமிஷன்) அதன் கூலியே தவிர வட்டியாகாது.

நாங்கள் வங்கியில் கிடைக்கும் வட்டியை வாங்கி உண்பதில்லை. மாறாக நன்மையை நாடாமல் ஏதாவது ஓர் ஏழைக்குக் கொடுத்து விடுகிறோம்; எனவே நாங்கள் செய்வது எப்படி தவறாகும் என்பதும் சிலரது வாதம்.
அவர்கள் அந்த வட்டியை வாங்கி உண்ணுகிறார்களோ இல்லையோ அது இரண்டாம் பிரச்சனை. முஸ்லிமாக இருக்கும் ஒருவன் வட்டியை வாங்கும் உரிமையை எங்கிருந்து பெற்றான். என்பது தான் முதலில் சிந்திக்க வேண்டியது.

வங்கியில் வேலை பார்ப்பது

வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்காகக் கணக்கு எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். இன்னும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என்றார்கள். அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் வங்கியில் வேலை பார்ப்பதும் வட்டிக்குத் துணை நிற்பதே. எனவே அதுவும் தவிர்க்கப்பட வேண்டியது என்பது தெளிவாகிறது.

நம் பொருளாதாரத்தை வட்டி பெறும் நோக்கத்தில் வங்கியில் சேமித்து வைப்பது, வங்கியில் கடன் பெறுகிறோம் எனக் கூறிக் கொண்டு, வட்டி முறையிலான கடனைப் பெற்று வட்டி செலுத்துவது,

ஏதாவது ஒரு வகையில் அதற்குத் துணை நிற்பது உள்ளிட்ட அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியதே.

முஸ்லிம்களிடம் வட்டி வந்ததன் காரணம்!

இன்றைய தினம் உலகில் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கையாளாத நாடே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல, உண்மை பேசுபவன்., ஒழுக்க மாண்புடையவன், நியாயமானவன், அநியாயத்தை எதிர்ப்பவன், என்றெல்லாம் பெயர் பெற்ற முஸ்லிம்கள் மத்தியில் இந்த வட்டி முறைப் பொருளாதாரம் தன் கைவரிசையைக் காட்டிக் கொண்டிருப்பது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. இன்றும் எத்தனையோ ஊர்களில் முஸ்லிம்கள் வட்டிக் கடையை நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சில ஊர்களில் பள்ளி வாசலுடைய பணத்தையும் வட்டிக்கு விட்டு வட்டி வாங்குகிறார்கள். அப்பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம் இது கூடாது என்று கூறி எதிர்த்தால் அவரை உடனடியாக வேலை நீக்கம் செய்யும் இழிநிலைகளும் இந்த வட்டியால் அரங்கேற்றப்படுகிறது.

உலகில் எவரிடமும் இல்லாத இன்னும் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய அளவிற்குத் தெளிவான சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டும், அதைப் புறக்கணித்து விட்டு மனிதன் வகுத்த நாசகரமான சட்டங்களைக் கையாண்டு வருவதே இதற்கு முழுக்காரணம் எனலாம். இந்த வட்டி முறை பொருளாதாரம் முஸ்லிம்கள் மத்தியில் தலை விரித்தாடுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் சீர் செய்வோமானால் நாம் நமது சமுதாயத்தை விட்டும் வட்டியை முற்றிலுமாகத் துரத்தி விடலாம்.

இறையச்சமின்மை

பொதுவாக இறையச்சம் நம்மை விட்டு அகன்று விட்டால் எல்லாத்தீய செயல்களும் எளிதில் நம் இதயத்தில் இடம் பிடித்து விடும். இறையச்சம் என்பது ஏனோதானோ என்றில்லாமல் முறையாக இருக்க வேண்டும்.

''நம்பிக்கை கொண்டாரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் (அல்லாஹ் விற்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம்.'' அல்குர்ஆன் 3:102 '
'உங்களால் இயன்றவரை (எந்த அளவிற்கு அதிகமாக அஞ்சமுடியுமோ அந்த அளவிற்கு அதிகமாக) இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.'' அல்குர்ஆன் 65:16 எந்த நிலையிலும் அல்லாஹ் நம்மைக் கண்கானித்துக் கொண்டே இருக்கிறான். எனவே அவன் ஏவியதைச் செய்து முடிப்போம்; விலக்கியதை விட்டொழிப்போம். அவனது கட்டளைகளை மீறலாகாது என்பதை மனதில் பதித்துச் செயல்பட்டால் மனிதன், தான் செய்யும் மானக் கேடான செயல்களை விட்டும் தவிர்ந்து கொள்ளலாம். உண்மையான இறையச்சம் உள்ளவரை ஷைத்தான் முதல் எவராலும் வழி கெடுக்க முடியாது என்பது நிச்சயம்.

மனிதாபிமானமின்மை

முஸ்லிம்களுக்கு மத்தியில் வட்டி முறைப் பொருளாதாரம் காணப்படுவதற்கான பல காரணங்களில் மனிதாபிமானமின்மையும் ஒரு காரணமாகும்.
இன்று எத்தனையோ இடங்களில் எண்ணிலடங்கா மனிதர்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். அப்படிப் பட்ட நிலையில் தன்னைப் போன்ற ஒரு மனிதன்தானே அவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாதவன் தான் மனிதாபிமானம் அற்றவன்.

இப்படிப்பட்ட மனிதர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளார்கள்.

''மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்'' அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் நூல்: புகாரி, முஸ்லிம் மனிதாபிமானமுள்ளவன் ஒருபோதும் வட்டி முறைப் பொருளாதாரத்தைக் கையாளவேமாட்டான். இரக்கத் தன்மையற்ற கல் நெஞ்சம் உள்ளவன் மட்டுமே வட்டி வாங்கி உண்பான்.

உறவினர்களை ஆதரிக்காத நிலை

முஸ்லிம்களுக்கு மத்தியில் வட்டி தலைதூக்கியத்ற்கு மற்றொரு காரணமும் உண்டு. உறவினர்களை உபசரிக்கும் மாண்பை முஸ்லிம்களுக்கு இறைவன் நன்றாகக் கற்றுக் கொடுத்துள்ளான். ஆனால் முஸ்லிம்களோ அதனைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். இதனால் இவர்களுக்குள் ஒருவருக் கொருவர் உதவி செய்து கொள்ளும் பண்புகள் பறிபோய்விட்டன. அதன் விளைவாகவே முஸ்லிம்கள் தங்கள் பொருளாதாரத் தட்டுப்பாட்டைப் போக்கிக் கொள்வதற்கு மனித உதிரத்தை உறிஞ்சும் வட்டியைத் தழுவினார்கள்.

உறவினர்களை ஆதரிப்பதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். அதனை முஸ்லிம்கள் முறையாகக் கையாண்டிருந்தால் வட்டியை முஸ்லிம்கள் மத்தியில் நுழைய விடாமலாக்கி இருக்கலாம்.

''நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மையைச் செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுப்பதைக் கொண்டும் ஏவுகிறான்'' அல்குர்ஆன் 16:30 '
'நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆகார வசதிகளை அதிகமாக்குகிறான். (தான் நாடியோருக்கு) குறைத்தும் விடுகின்றான். என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.''

''ஆகவே உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியத்தைக் கொடுத்து வருவீராக! அவ்வாறே ஏழைகளுக்கும்,. வழிப் போக்கர்களுக்கும் அவரவருக்குரியதைக் கொடுத்து விடுவீராக!'' அல்குர்ஆன் 30:37,38 ''உறவினருக்கு அவரின் உரிமையைக் கொடுப்பீராக.'' அல்குர்ஆன் 17:26 ''தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவராக, வீண்பெருமையுடையவராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.'' அல்குர்ஆன் 4:36 இதுபோன்று குர்ஆனில் பல இடங்களில் உறவினர்களுக்கு உதவ வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். அது மட்டுமல்லாமல் 4:36 வசனத்தில் நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ''நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவராக வீண் பெருமையுடையவராக இருப்பவர்களை நேசிப்பதில்லை'' என்று குறிப்பிட்டுள்ளான். உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும், தான் செய்த உதவியை சொல்லிக் காண்பிக்கவோ, பெருமையாக எண்ணவோ கூடாது என்பதைத் தெளிவு படுத்துகின்றான். மேலும் உறவினர்களுக்கு இன்று வரையிலும் உலகத்தில் யாரும் வழங்காத மிகப் பெரும் உரிமையையும் வழங்கியுள்ளான்.
''பாகப் பிரிவினை செய்யும் போது(பாகத்திற்கு உரிமை இல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ, வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அச்சொத்தில் வழங்குங்கள். மேலும் அவர்களுடன் கனிவான வார்த்தையைக் கொண்டே பேசுங்கள்'' அல்குர்ஆன் 4:48 குர்ஆன் கூறும் இந்தக் குணப்பண்புகள் மனிதனுக்குள் உண்டாகி விட்டால் நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பொருளா தாரத்தில் தன்னிறைவு அடைந்து விடுவான். யாரையும் மோசடி செய்யவேண்டிய அவசியமில்லை என்ற நிலை உண்டாகிவிடும். சமுதாயத்தில் ஒற்றுமையும் ஓங்கி விடும்.
உறவினர்கள் இணைந்து வாழ்வது பற்றி நபி(ஸல்) கூறுகையில் ''சரிக்குச் சரியாக நடந்து கொள்பவன் உறவினருடன் சேர்ந்து வாழ்பவனல்லன்; மாறாக உறவினர்கள் விலகிக் கொள்ளும் போதும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவனே உறவினருடன் சேர்ந்து வாழ்பவன்'' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) நூல்: புகாரி, திர்மிதி,

மனிதனுக்கு இறைவன் வகுத்தளித்த விதிகள் தான் முழுத் தீர்வையும் தரும், மனிதனால் வகுத்தளிக்கப்படும் சட்டங்கள் மனித குலத்திற்கு தீமையைத்தரும் என்று நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான்.

இஸ்லாமியச் சட்டங்களில் சரியாக எதையும் செயல் படுத்திப் பார்க்காமல் இருந்து கொண்டு, இஸ்லாமியச் சட்டங் களின் மூலம் தீர்வைக் காணமுடியாது, நடைமுறைக்கு ஒத்துவராது என பிதற்றுவது முறையல்ல. முதலில் செயல் படுத்திப் பாருங்கள் இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்

உழைப்பைக் கைவிடல்


இஸ்லாமியச் சமுதாயத்தில் வட்டி வேர் விட்டிருப்பதற்கு மற்றொரு காரணம் உழைப்பைக் கைவிட்டதாகும். வட்டி வாங்குபவன் எவ்வித உழைப்பும் இல்லாமல் லாபம் மட்டும் பெற்றுக் கொண்டே இருக்கின்றான். இந்த ஆசை அவனை உழைப்பற்றவனாக ஆக்கி விடுகிறது, பொருளாதாரத்தைப் பெருக்குவதை மட்டும் தன் நோக்கமாகக் கொண்டு சமுதாயத்தில் மற்ற எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாமல் பிரிந்து விடுகிறான்.

பிறருடைய உழைப்பில் தன் பங்கு இல்லாமல் உண்பது அநீதமாகும். அநியாயமான முறையில் உண்பதை இறைவனும், இறைத்தூதரும் தடைசெய்துள்ளனர். ''அன்றியும் உங்களில் ஒருவர் மற்றவர் பொருளை தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.'' அல்குர்ஆன் 2:188 ''நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது உங்கள் உழைப்பின் மூலம் உண்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி நூல்: திர்மிதி, நஸயீ, அபூதா¥த்)

பொதுவாக வட்டி வாங்குபவர்கள், வட்டியில் தான் பெருமளவு லாபம் உள்ளது என்று எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையில் வட்டியில் கிடைக்கும் லாபத்தை விட தொழிலில் தான் அதிகமாக லாபம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திட வில்லை. உழைப்பே உயர்நிலையைச் செய்யும் என்பதை மறந்து விட்டார்கள்.

இன்று இதற்குச் சாட்சியாக எத்தனையோ, நிறுவனங்கள் முன்னேறிக் கொண்டிருப்பதையும், எத்தனையோ தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கண்டு வருவதையும் நாம் காண்கின்றோம். இதனை இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான். ''அல்லாஹ் வட்டியை (எவ்விதப் பாக்கியமுமில்லாமல்) அழிக்கின்றான்; இன்னும் தான தர்மங்களைப் (தன் அபிவிருத்தியைக் கொண்டு) பெருகச் செய்கின்றான். அல்குர்ஆன் 2:276

இறைவனும் இறைத்தூதரும் ஏவியுள்ள முறைப்படி ஒரு முஸ்லிம் உழைக்க முற்பட்டால், அவன் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே லாபத்தைச் சம்பாதிக்க முடியும். ஆனால் இன்று உழைக்கச் சோம்பல் பட்ட முஸ்லிம்கள் வட்டி முறை பொருளாதார வளர்ச்சி என்று சொல்லக்கூடிய வழிகேட்டில் தங்களை நுழைத்துக் கொண்டனர். இதை விட்டுவிட்டு எப்போது இறைச்சட்டத்தைக் கையாள்வரோ அப்போதே ஈருலக வெற்றியைப் பெறுவர்.

ஸகாத்தைக் கைவிடல்
வறுமையைப் போக்கி மனிதன் தன் வாழ்வைச் சீராக ஆக்கிக் கொள்வதற்கு இறைவனால் அருளப்பட்ட அருட்கொடை தான் 'ஸகாத்' (Zakath) எனும் காப்புவரி, இது சமுதாயத்திற்கு ஒரு வேலியாகும்.
வறுமையின் கொடுமையால் ஒரு முஸ்லிம் தன்னிச்சையாக செயல்பட்டு 'ஹராம், ஹலால்' என்ற வேறுபாடின்றி எதையும் உண்ணலாம், எப்படியும் வாழலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடைதான் ஜகாத்! இந்த அருட்கொடையை அலட்சியம் செய்ததன் விளை வாகத் தான்வட்டியைத் தன்னுள் புகுத்திக் கொண்டு பிரிக்க முடியாமல் தவிக்கிறது. இன்றைய முஸ்லிம் சமுதாயம்.

ஸகாத் என்பது போதிய வசதியுடையவர், தான் வைத்திருக்கும் சொத்தின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால் இரண்டரை சதவீதம் பொது நிதி நிறுவனத்திடம் கொடுப்பதாகும். அதனை மொத்தமாகச் சேகரித்து குர்ஆன் கூறும் நபர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அப்படிச் செயல்படத் தொடங்கினால் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொரு முஸ்லிமும் பொருளாதாரத்தில் நிச்சயம் தன்னிறைவு அடைந்து விடுவான்.

நம்மவர்களில் குறைந்த அளவு 20 சதவிதம் மக்கள் ஜகாத் கொடுக்கும் தகுதியைப் பெற்றிருந்தும், அதைச் செய்வதில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தை விட்டும் வட்டியை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஜகாத் தான். எனவே வட்டி ஹராம்! வட்டி ஹராம்!! என்று உபதேசம் செய்பவர்கள் ''பைத்துல் மால்'' ஒன்றை அமைத்து ஜகாத்தைச் சேகரித்து, பிரித்தளிக்காத வரையில் இஸ்லாமியச் சமுதாயத்தை விட்டும் வட்டியைப் பிரிக்கவே முடியாது.

அதை விட்டு மீளுவதற்கான வழி


ஒரு முஸ்லிம் வட்டி எனும் கொடிய நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் அவன் இறையச்சம் உள்ளவனாகவும் மனிதாபிமானம் உள்ளவனாகவும் உறவினர்களை ஆதரிக்கக் கூடியவனாகவும், உழைப்பைக் கையில் கொண்டவனாகவும் தகுதி இருப்பின் ஜகாத்தை முறையாகக் கொடுக்க கூடியவனாகவும் தானும் மாற வேண்டும்; தன் சமுதாயத்தையும் மாற்ற வேண்டும். மேலும் தன் சமுதாயத்தின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு வட்டியில்லா வங்கியைத் தொடங்க வேண்டும். அந்த வட்டியில்லா வங்கியை இறையச்சம் மிகுந்தவர்கள் நிர்வகிக்க வேண்டும். இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும் இதுவே ஆகும். இதனைக் கடைபிடிக்கக் கூடியவர்களாக இறைவன் நம்மை மாற்றி, வட்டி எனும் இக்கொடிய நோயிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!

ISLAMIC FINANCIAL SYSTEM GIVES THE SOLUTION FOR ECONOMY CRISIS

திருமறையும் நவீன கருவியலும்


திருமறைக் குர்ஆனானது கருவின் வளர்நிலைகளைப் பற்றிக் கூறும் போது.

நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர்ரூபவ் (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளிpயாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக்கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம். பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழுமனிதனாக) உருவாக்கினோம்.ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும் பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன். (அல்-குர்ஆன் 23:12-14)

தொடராக வரக்கூடிய குர்ஆனின் வசனங்கள் யாவும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டவைகளே. அரபி மொழியில் இருக்கும் வசனங்கள் தான் குர்ஆன் எனப்படும். அதில் தான் நாம் குர்ஆனின் முழுமையான அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இமேற்கண்ட குர்ஆன் வசனத்தில் வரும் அலக்காعـلـقة) ) எனும் அரபிச் சொல்லுக்குரூபவ் அதன் அகராதிப் பொருள்படி.
1)அட்டைப் பூச்சி.
2)தொடுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்.
3)இரத்தக் கட்டி

Figure 1: Drawings illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (Leech drawing from Human Development as Described in the Quran and Sunnah, Moore and others, p. 37, modified from Integrated Principles of Zoology, Hickman and others.  Embryo drawing from The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 73.)


இந்த அலக்கா (عـلـقة) நிலையிலுள்ள கருவை அட்டைப் பூச்சி (Leech)-ன் புறத்தோற்றத்துடன் ஒப்பீடு செய்வோமானால்ரூபவ் படத்தில் உள்ள உருவ ஒற்றுமையைக் காண முடிகின்றது.(The Developing Human, Moore and Persaud 5th ed., P.08.) மேலும்ரூபவ் இந்த அலக்கா (عـلـقة) என்ற நிலையில் கருவானது தாயின் கருவறையில் ஒட்டிக் கோண்டிருக்கும் நிலையில் தாயின் இரத்தத்தை உறிஞ்சி தன் வளர்நிலைகளுக்கு சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த செயல்பாடு குளத்தில் காணப்படும் அட்டைப் பூச்சியானது பிற பிராணி அல்லது விலங்கினங்களின் தோலின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டுரூபவ் அந்த பிராணியின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதை ஒத்து இருக்கின்றது.* (* Human Development as Described in the Qur’an and Sunnah, Moore and Others. P.36.)

Figure 2: We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 66.)  (Click on the image to enlarge it.)

Figure 3: In this photomicrograph, we can see the suspension of an embryo (marked B) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother.  The actual size of the embryo is about 0.6 mm. (The Developing Human, Moore, 3rd ed., p. 66, from Histology, Leeson and Leeson.)



அலக்கா (عـلـقة) எனும் அரபிப் பதத்திற்கான இரண்டாவது பொருளானது தொட்டுக் கொண்டு அல்லது தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் எனப்படும். தாயின் கர்ப்ப அறையில்ரூபவ் கருவின் முதல் ஆரம்ப வளர் நிலையில் எவ்வாறு கரு அமைந்திருக்கும் என்பதையும்ரூபவ் அது எவ்வாறு கர்ப்ப அறையில் தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் நுண்ணிய புகைப்படப் பிரதி 2 மற்றும் 3 ல் காண்கின்றீர்கள்.

Figure 4: Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage.  The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The Developing Human, Moore, 5th ed., p. 65.)  (Click on the image to enlarge it.)


மேலும் அலக்கா (عـلـقة) எனும் பதத்திற்கான மூன்றாவது பொருளாக இரத்தக் கட்டி எனப் பொருள் கொள்ளப்படுகின்றது. கருவின் ஆரம்ப வளர்நிலையில் அதை நோக்குவோமானால்ரூபவ் அதன் புறத் தோற்றமும் அதை மூடி இருக்கும் பை போன்ற சவ்வுத் தோற்றமும்ரூபவ் உறைந்த நிலையில் உள்ள இரத்தக் கட்டி போன்ற அமைப்புடன் இருப்பதை காண முடியும். கருவின் ஆரம்;ப நிலையில் அதிகப்படியான இரத்த ஓட்டம் கருவின் மீது பாய்ச்சப்படுவதால்ரூபவ் அதன் புறத் தோற்றம் உறைந்த நிலையிலுள்ள இரத்தக் கட்டி போன்று தோற்றமளிக்கின்றது. (படம். 4).ழூ (Human Development as Described in the Qur’an and sunnah, Moore and Others., Page.37-38). மேலும் கருவின் வளர்நிலையில் அதனது மூன்றாவது வாரம் வரை இரத்த ஓட்டச் சுழற்சி செயல்படாதிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ழூ (The Developing Human, Moore and Persuad, 5th ed., P.65). மேற்கண்ட அலக்கா (عـلـقة) எனும் அரபிப்பதத்திற்கான மூன்று அர்த்தங்களுமே அது தரும் பொருள்களுக்கான விளக்கத்திற்கு எந்த வித மாறுபாடும் இல்லாமல் ஒத்திருப்பதை நாம் காண முடிகின்றது.

Figure 5: Photograph of an embryo at the mudghah stage (28 days old).  The embryo at this stage acquires the appearance of a chewed substance, because the somites at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance.  The actual size of the embryo is 4 mm. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 82, from Professor Hideo Nishimura, Kyoto University, Kyoto, Japan.)



Figure 6: When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed, we find similarity between the two.
A) Drawing of an embryo at the mudghah stage.  We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The Developing Human, Moore and Persaud, 5th ed., p. 79.)
B) Photograph of a piece of gum that has been chewed.
(Click on the image to enlarge it.)



கருவின் அடுத்த வளர்நிலையாக முத்கா (مضغة) எனும் அரபிப்பதத்தைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. முத்கா (مضغة) எனும் சொல்லுக்கு அரபி அகராதியானது பற்களால் மென்று துப்பிய பொருள் ((Chewed-like substance)) சூவிங்கம் மிட்டாயைக் கடித்து மென்று துப்பும் போதுரூபவ் அதில் பற்களின் வரிகள் பட்டு எவ்வாறு தோற்றம் தருமோ அது போலத் தோற்றத்தைரூபவ் முத்கா நிலையில் உள்ள கரு தோற்றம் தரும். இது கரு வளர்நிலையில் 28-வது நாளில் தெளிவாகக் காணப்படும். மேலும் பற்களின் வரிகள் போன்ற அமைப்பையும் கருவின் முதுகுப் புறத்தில் தெளிவாகக் காணலாம். ழூ படம். (5 மற்றும் 6))* The Developing Human, Moore and Persuad, 5th ed., P.8.


அறிவியல் என்ற துறை இருப்பதையே அறியாத அந்தக் காலத்தில்ரூபவ் இன்று இருப்பது போல எக்ஸ்-ரே கருவிகள்ரூபவ் ஊவு ஸ்கேன் கருவிகள்ரூபவ் நுண் பெருக்கிகள் (Microscope) போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளே இல்லாதரூபவ் அவற்றை எண்ணிக் கூடப் பார்க்க இயலாத 1400 ஆண்டுகளுக்கு முன் உள்ள சமூகத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்ரூபவ் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு இணையான அறிவியல் கூற்றுக்கு முற்றும் மாற்றமில்லாத வகையில் எவ்வாறு இவ்வளவு தெளிவான முறையில் கரு வளர்ச்சியைப் பற்றிக் கூற முடிந்தது!!!

கி.பி. 1677-ல் தான் ஆணின் விந்தில் உள்ள ஸ்பெர்மெடோஸோவா (Spermatazoa) எனும் விந்தணுச் செல்லை உருப்பெருக்கி (Miroscope) மூலம் ஹாம் மற்றும் லீயுவென்ஹேக் எனும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் வாழ்ந்த அந்தக் காலம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தை விட 1000 ஆண்டுகள் பிந்தைய காலமாகும் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் விந்தணுவைக் குறித்து ஆய்வு செய்த போதுரூபவ் விந்தணுவில் இருக்கும் மனிதனின் மாதிரித் தோற்றம் தான்ரூபவ் பெண்ணின் கருப்பையை அடைந்துரூபவ் வளர்கிறது எனும் (தவறான) கொள்கையை அன்றைய மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.The Developing Human, Moore and Persuad, 5th ed., P.9.


உடற்கூறு இயல் (யுயெவழஅல)இ கருவியல் (Embryology) ஆகிய மருத்துவத் துறையில் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும் இவற்றில் முனைவர் (P.hd.)பட்டங்களும் பெற்றுள்ள டாக்டர் எமிரிடஸ் கீத் டு. மூர் என்பவர் 'மனிதனின் வளர்நிலைகள்' (The Developing Human) எனும் ஆய்வு நூலை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 8 வௌ;வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இவர் எழுதிய இந்த அறிவியல் பூர்வமான ஆய்வானதுரூபவ் தனிப்பட்ட ஒருவரால் ஆய்வு செய்து எழுதப்பட்ட சிறந்த நூலாகரூபவ் அமெரிக்காவில் உள்ள இதற்கான சிறப்பு ஆய்வுக் குழுவில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள டொராண்டோ பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும்ரூபவ் மருத்துவத் துறைப்பிரிவில் அடிப்படை அறிவியல் ((Basic Science) பிரிவில் உதவித் தலைவராகவும்ரூபவ் உடற்கூறு இயல்(Anatomy) துறையில் 8 ஆண்டுகள் சேர்மனாகவும் பணிபுரிந்துள்ளார். 1984-ல் கனடாவின் உடற்கூறு இயல் துறை அசோஸியேஸனின் சிறப்பு விருதான J.C.B.வுpருதைரூபவ் டாக்டர். கீத் மூர் அவர்களின் உடற்கூறு இயல் ஆய்வுக்கான சிறப்பு விருதாக வழங்கி கவுரவிதிதுள்ளது. உலக அளவில் பல்வேறு அஸோஸியேஸன்களையும் குறிப்பாக அமெரிக்க மற்றும் கனடாவின் உடற்கூறு இயல் மற்றும் பல்வேறு ஆய்வுப் பிரிவுக் கவுன்சில்களையும் வழி நடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு.


1981-ல் சௌதி அரேபியாவின் தம்மாம் (Dammam) நகரில் நடைபெற்ற 7-வது மருத்தவ கருத்தரங்கில் டாக்டர்.கீத் மூர் அவர்கள் கலந்து கொண்டு பேசும் பொழுதுரூபவ் மனிதனுடைய கருவின் வளர்நிலைகளைப் பற்றி குர்ஆன் கொண்டுள்ள கருத்துக்களை ஆய்வு செய்து உதவுவதில் நான் பெருமைப்படுகின்றேன் என்றார். மேலும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இந்த அறிவியல் கருத்துக்கள் கொண்ட வசனங்களை கடவுளிடம் இருந்து தான் முஹம்மது அவர்கள் பெற்றிருக்க முடியும். ஏனெனில்ரூபவ் அவர்கள் வாழ்ந்துரூபவ் மறைந்து பன்னெடுங் காலம் வரையும் இதற்கான அறிவும் ஆய்வும் நடைபெறவில்லை. மாறாகரூபவ் மிக நீண்ட காலத்திற்குப் பின்பே இந்த ஆய்வுகள் யாவும் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆராய்ச்சிகளின் மூலமாக முஹம்மது அவர்கள் இறைவனின் திருத்தூதர் தான் என்பதை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
 
(The reference for this saying is “This is the Truth (video Tape).  For a copy of this video tape Please contact one of the Organisations listed on page …. )


இதைத் தொடர்ந்துரூபவ் மேற்கண்ட ஆய்வுகளின் மூலம் குர்ஆனானது இறைவனின் வேதம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? ஏனக் கேட்ட பொழுது இதில் எனக்கு எந்த சிரமமும்ல்லை எனப் பதில் கூறினார். (This is the TRUTH video tape).


மேலும் டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுதுரூபவ் மனித கரு வளர்ச்சியானது பல தொகுதிகளைக் கொண்ட மிகவும் சிக்கலானரூபவ் இடைவிடாத தொடர்ச்சியான பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வளர்நிலைகளைக் கொண்டது. இந்த வளர்நிலைத் தொடர் மாற்றங்களை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் மணிமொழி (ஹதீஸ்) களைப் பயன்படுத்தி தனித் தனிப் பிரிவுகளாக அல்லது நிலைகளாக பிரித்தறிவதற்கான புதிய முறைகளை ஏற்படுத்த முடிந்துள்ளது. (இது நவீன விஞ்ஞானத்தற்கு குர்ஆன் வழங்கியுள்ள பேருதவியாகும் - ஆசிரியர்) இந்த புதிய முறையானது இலகுவானதாகவும்ரூபவ் விரிவானதாகவும்ரூபவ் இன்றைய அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்புடையதாகவும் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டின் போது வாழ்ந்த அண்ணலார் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய குர்ஆனையும் அவர்களது போதனை (ஹதீஸ்) களையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியதன் விளைவாகரூபவ் மனிதனின் கருவளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அறிவை இன்றைய நவீன அறிவியல் உலகத்திற்கு தெளிவுபடுத்த முடிந்துள்ளது என்பது மிகவும் ஆச்சரியமானதே!!! என்று குறிப்பிட்டுப் பேசினார். 

மேலும் அவர் பேசும் போது: 

கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்திரூபவ் இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை. எனக்குத் தெரிந்த வரைரூபவ் இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர். இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும்ரூபவ் அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்துரூபவ் திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது. மேலும்ரூபவ் திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில்ரூபவ் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாதரூபவ் எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள்ரூபவ் இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது.

George W. புஷ்ஷின் கனவில் உதித்த கடவுள்

ஆப்கானிஸ்தானில் வேரூயஅp;ன்றியுள்ள உஸாமா பின்லாடனை தாக்குமாறும் கடவுள் என்னிடம் கூறினார்ரூபவ் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டு வரவும்ரூபவ் இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் பாலஸ்தீனர்களுக்கான தனிநாடு ஆகியவை கடவுளின் புனிதக் கட்டளையின் ஒரு பகுதியாகும் என்று புஷ் கூறியுள்ளார். 


பிபிஸி செய்தி நிறுவனம் வழங்கி வருகின்றதொரு தொடரில்ரூபவ் கடந்த ஜுன் மாதத்தில் பாலஸ்தீனத் தலைவர்களுடன் நடைபெற்றதொரு சந்திப்பதில் தமது உள்ளக்கிடக்கையை புஷ் இவ்வாறு வெளியிட்டதாக அது செய்தி வெளியிட்டுள்ளது.



ஸ்பெயினிலிருந்து இந்தோனேஷியா வரைக்கும் உள்ள நாடுகளை அடிமைத்தளைக்குள் தள்ளி இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கானதொரு திட்டம் கம்யூனிஸத்திடம் இருந்தது என்று புஷ் குற்றம் சாட்டியுள்ளார். பாலஸ்தீன முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நபில் ஷாத் அவர்கள் கூறுவதாவதுரூபவ் புஷ் என்னிடமும்ரூபவ் முன்னாள் பாலஸ்தீனப் பிரதமரும் இன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதியாகவும் உள்ள மஹ்மூத் அப்பாஸ் அவர்களிடமும்ரூபவ் ''கடவுளிடமிருந்து வந்த கட்டளையின் அடிப்படையில் நான் இந்த புனிதப் பணியில் கடவுள் என்னிடம் ஜார்ஜ்..ரூபவ் ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடு என்றார்ரூபவ் நான் போராடினேன். இன்னும் ஜார்ஜ்..ரூபவ் நானும் களமிறங்கினேன் என்று அப்போது கூறியுள்ளார்.




இப்பொழுது மீண்டும் கடவுள் என்னிடம்;ரூபவ் 'பாலஸ்தீனர்களுக்கான நாட்டை உருவாக்கிக் கொடுரூபவ் இன்னும் இஸ்ரேலியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்து'ரூபவ் அத்துடன் மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கு..! என்று கூறுவதாக உணர்கின்றேன்ரூபவ் என்றும் கூறியுள்ளார். நிச்சயமாக கடவுள் மீது சத்தியமாக..ரூபவ் ''அதனைச் செய்யும் வழியில் தான் நான் இருக்கின்றேன்'' என்று கூறியுள்ளார். 


ஒழுக்க ரீதியாகவும்ரூபவ் எனது மதம் சார்ந்த கடமையை நிறைவேற்றுதனையிட்டும் நான் செயல்பட வேண்டியவனாக இருக்கின்றேன்ரூபவ் என்று புஷ் கூறியதை மஹ்மூத் அப்பாஸ் அவர்கள் தனது பேட்டியில் நினைவுபடுத்துகின்றார். கடவுளின் ஏற்பாட்டால் தான் இந்தப் போர்களை நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன் என்று நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் கடவுளின் தூதராக இருந்து கொண்டுரூபவ் இயன்றவரை அவரது திட்டத்தை நிறைவேற்றிடவே நான் விரும்புகின்றேன்.


நிச்சயமாகரூபவ் நான் மன்னிப்புக் கோரக் கூடியவனாகவும் இருக்கின்றேன் என்று கூறியுள்ளார். இங்கே கிறிஸ்தவ உலகம் கவனிக்கத்தக்கதொரு விசயம் உள்ளது. கடவுளின் ஏற்பாட்டால் தான் நான் பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டை உருவாக்கவும்ரூபவ் இஸ்ரேலியர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்ரூபவ் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் களத்தில் இறங்கி உள்ளேன் என்று புஷ் கூறி இருப்பதை கிறிஸ்தவ உலகம் நன்கு சிந்திக்க வேண்டும். 


இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தவர்கள் யூதர்கள்ரூபவ் இன்னும் சிலுவைப் போருக்கு முன்பும் பின்பும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் தான் கிறிஸ்தவர்களும்ரூபவ் யூதர்களும் நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆகரூபவ் பாலஸ்தீனத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்றால்ரூபவ் மத்திய கிழக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்றால் மீண்டும் பாலஸ்தீனம் முஸ்லிம்களின் கைகளுக்குள் தான் வந்தாக வேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி கிடைக்கும். தன்னைச் சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னித்து..ரூபவ் ஒருவேளை கிறிஸ்து அவர்களுக்கு நிம்மதியை வழங்க நாடி விட்டார் என்றால்ரூபவ் இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையை தமது இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக ஆக்கி கொண்டுள்ளரூபவ் இன்னும் அவரது வழித்தோன்றல்களுக்கு எந்தத் துன்பத்தையும் தராத முஸ்லிம்களை அவர் தண்டிக்க நாடியிருப்பது என்ன நியாயம் (அதாவது புஷ்ஷின் மூலமாக போர் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பதன் மூலமாக)..? உண்மையில்ரூபவ் புஷ்ஷின் இந்தப் பேட்டி குறித்து கிறிஸ்தவ உலகம் என்ன கூறப் போகின்றது..? உண்மையில் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெஸைய்யா என்ற தூதுவானாக புஷ் அவதாரம் எடுத்து விட்டார் என்று மகிழப் போகின்றார்களா? அல்லது கிறிஸ்தவ உலகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் புஷ்ஷையும் அவரது கூலிப் படைகளையும் தங்களது மதத்திலிருந்து நீக்கப் போகின்றார்களா?


கடவுள் இருக்கின்றாரா?இல்லையா?

கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்கிற கேள்வி மனிதனின் உள்ளத்தைப் பல நூற்றாண்டுகளாகவே ஆக்கிரமித்து வந்துள்ளது வரையறைக்குட்பட்ட மனிதனின் சிற்றறிவால்ரூபவ்முடிவேயில்லாத வரையறைக்குட்படாத இறைவனின் உண்மையை அவன் இருக்கிறான் என்பதை நிருபித்திட இயலாது என்றும்ரூபவ் ஆவல் பொங்கும் மனித உள்ளத்தைத் திருப்தியடையச்செய்வதற்காக அவனது உள்ளமையை உதாரணங்களால் விளக்கிக் காட்டிடத்தான்மனித அறிவால் முடியும் என்றும் இறைவன் இருப்பதாக நம்புவோர் கருதுகின்றார்கள்.





இறைவனை நிராகரிப்பவர்கள் அறிவியலை, தத்துவத்தை அல்லது அறிவியலின் சிறப்புக் கொள்கைகள் சிலவற்றைத் தாம் சார்ந்திருப்பதாகக் கூறுகின்றார்கள் இவர்களுடைய வாதங்கள் சில நேரங்களில் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் சில நேரங்களில் தத்துவ உலகில் பொருத்தமற்றவையாகவும் உள்ளன. அதே நேரத்தில் எப்போதும் சிக்கல் மிகுந்தவையாகவும் பெரும்பாலும் அறிவக்கு ஒவ்வாதவையாகவும் உள்ளன. எனினும் வளர்;ச்சி அடைந்த உள்ளம் இறைவனைச் சென்றடையும் பாதையைக் கண்டறிந்திட முடியும். இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போவதால் அதற்கான வழியே இல்லை என்று அர்த்தமாகிவிடாது. ஓர் உண்மையை எதார்த்தத்தை ஏற்க மறுத்து விடுவதால்அந்த உண்மை பொய்யானது கற்பனையானது என்றாகிவிடாது.


"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." - Francis Bacon. ( phyllosphere)


நம்மைச் சுற்றிலும் நாம் சற்று கூர்ந்து நோட்டமிடுவோமாயின் நமக்கு பின்வரும் விஷயங்கள் புலப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார். ஒவ்வொரு பள்ளிக் கூடத்திற்கும் ஒரு முதல்வர் இருக்கின்றார். ஒவ்வொரு நகரத்திற்கும் ஊருக்கும் நகரத்தந்தை ஒருவர் இருக்கின்றார். ஒவ்வொரு மாநிலமும் முதலமைச்சர் ஒருவரையும் ஆளுநர் ஒருவரையும் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு உற்பத்திப் பொருளும் உற்பத்தியாளர் ஒருவரின் உழைப்பே. என்பதையும்ரூபவ் ஒவ்வோர் அழகிய ஓவியமும் திறன் வாய்ந்த ஓவியர் ஒருவரின் படைப்பே என்தையும் நாம் சந்தேகத்திற்கிடமின்றி அறிவோம். இவையணைத்தும் தெளிவான உண்மைகளே என்றாலும் இந்த உலகிலுள்ள பிரம்மாண்டமான அரிய படைப்புகளைப்பற்றிரூபவ் மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆவல் தொனிக்கும் ஐயங்களைப் போக்கக்கூடியனவாகவும் அவற்றைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவுத்தாகத்தை தணிக்கக்கூடியனவாயும் அவை இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் வானப்பெருவெளியும். நீண்ட அடிவானப்பரப்பும்ரூபவ் இரவும் பகலும் ஓர் ஒழுங்கு முறையுடன் மாறி மாறி வந்துகொண்டிருப்பதையும் சூரியன் சந்திரன் பெரும் பெரும் வின்மீன்கள் ஆகியன தத்தம் பாதையில் தத்தம் திசைகளில் நியமம் தவறாமல் சுழன்று வருவதையும் உயிருள்ள மற்றும் உயிரற்றப் பொருள்களின் உலகம் இயங்கி வருவதையும் மனிதன் தலைமுறை தலைமுறையாக நாகரிகத்தில் வளர்ச்சியடைந்து தொடர்ந்து முன்னேறி வருவதையும் கண்டு சிந்திக்கும் மனிதன் அடிக்கடி வியப்படைகின்றான். ஆகவே நாம் எந்தப் பொருள்களுடன் வாழ்ந்து வருகின்றோமோ எவற்றைப் பெரிதும் அனுபவித்து வருகின்றோமோ அந்தப் பொருள்களைப் படைத்துக் காப்பவனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்று அவன் விரும்புகின்றான். இந்த மாபெரும் அண்டத்திற்கான விளக்கத்தைக் கண்டுபிடித்திட நம்மால் முடியுமா ? பிரபஞ்ச வாழ்வின் இரகசியத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி எடுத்தியம்பிடும் மெய் விளக்க முறை ஏதும் இருக்கின்றதா? . இருக்கின்றது. வாருங்கள் இனி அதனைப்பார்ப்போம். எந்தக் குடும்பமும் பொறுப்புணர்வுள்ள ஒரு தலைவன் இல்லாமல் இயங்கிட முடியாது என்பதையும்ரூபவ் ஆரோக்யமானரூபவ் மன வலிமை வாய்ந்த நிர்வாகம் இல்லாமல் எந்த நகரமும் முன்னேறி வாழ்ந்திட இயலாது என்பதையும். நிர்வாகத்திறனுள்ள ஆட்சியாளர் இல்லாத எந்த நாடும் உலகில் நீடித்து வாழ்ந்திட முடியாது என்பதையும் நாம் அறிந்துள்ளோம். எதுவும் தானாகவே தோன்றி விடுவதில்லை என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம். மேலும் இந்தப் பேரண்டம் மிகுந்த ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் இயங்கி நிலைத்து வருவதையும் பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறு நிலைத்திருப்பதையும் பார்க்கின்றோம். இவ்வாறிருக்க இவையனைத்தும் தற்செயலானரூபவ் ஏதேச்சையான நிகழ்வுகள் என்று நம்மால் சொல்ல முடியாது. மனிதனும் உலகம் முழுவதும் தோன்றி வாழந்;து கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமாக அல்லது திடீரென்று சந்தர்ப்ப வசமாக நடந்துவரும் ஒரு நிகழ்ச்சி என்று வர்ணித்திட முடியுமா ? மனிதன் தற்செயலாகவோ திடீரென்று ஏதேச்சையாக தோன்றி இருப்பானாயின் அவனது வாழ்க்கை முழுவதுமே ஏதேச்சையானதாய் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அவனது வாழ்க்கை முழுவதுமே அர்த்தமற்றதாயிருக்கும். எந்த அறிவார்ந்த மனிதனும் தன் வாழ்வை நிலை மாறிக் கொண்N;டயிருக்கும் அதிர்ஷ்டத்தின்ரூபவ் சந்தர்ப்பவசத்தின் அடிப்படையில் அமைந்திட அனுமதிக்க மாட்டான். அறிவார்ந்த மனிதன் ஒவ்வொருவனும் தனது வாழ்வை முடிந்த வரை அர்த்தமுள்ளதாக அமைத்துக் கொள்ளவும். ஒரு முன் மாதிரியின் அடிப்படையில் ஓர் ஒழுக்க நியதியைத் தனக்கென அமைத்துக் கொள்ளவுமே முயற்சி செய்வான். தனி மனிதர்களும் குழுக்களும் நாடுகளும் கூட தமக்கென ஒரு செயல்பாட்டு முறையை திட்டமிட்டு வகுத்துக் கொள்கின்றன. முன்னெச்சரிக்கையுடன் சிரத்தையெடுத்து வகுக்கப்படுகிற திட்டம் ஒவ்வொன்றும் விரும்பத்தக்க சில பலன்களைத் தரவே செய்கின்றன. உண்மை என்னவெனில் மனிதன் ஏதேனுமொரு வகையில் திட்டமிடுவதில் நற்பலன்களையும் மதிப்பையும் அவனால் நன்கு உணர முடியும். மனிதன் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் சின்னஞ்சிறு அங்கமாக திகழ்கிறான். அவனால் திட்டங்களை தீட்டிட முடிகிறது. திட்டமிடுவதில் உள்ள நற்பலன்களைப் புரிந்து கொள்ள முடிகிறது எனும் போது அவனது வாழ்வும் இந்தப் பேரண்டத்தின் வாழ்வும் கூட ஒரு திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையில்தான் அமைந்திருக்க வேண்டும். அதாவது நமது உலகியல் அல்லது இயற்பியல் வாழ்க்கைக்குப்பின் நம்மை வடிவமைக்கின்ற இறை நாட்டமொன்று கட்டாயம் இயங்கிக்கொண்டிருக்கத்தான் வேண்டும். பொருள்களை தோற்றுவித்து அவற்றை ஒழுங்கமைப்புடன் இயங்கிடச் செய்கின்ற தன்னிகரற்ற ஆற்றல் கொண்ட மூளையொன்று செயல்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். நாம் வசிக்கும் உலகின் வியப்பூட்டும் அம்சங்களும் வாழ்க்கையின் இரகசியங்களும் வெறும் அதிர்ஷ்டத்தினால் - சந்தர்ப்பவசத்தால் உற்பத்தியானவையாகவும் தற்செயல் நிகழ்வுகளாகவும் திடீர் விபத்தாகவும் இருக்கவே முடியாது. ஆகவே ஒவ்வொரு பொருளையும் ஒழுங்கமைப்புடன் இந்த உலகில் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதற்காக பேராற்றல் ஒன்று இயங்கிக்கொண்டுதான் இருக்க வேண்டும். எழில் கொஞ்சும் இயற்கை அழகில் நமக்குப் புலப்படும் உண்மை இதுதான். மாபெரும் படைப்பாற்றலும் ஆக்கத்திறனும் கொண்ட கலைஞன் ஒருவன்தான் இந்த இயற்கை ஓவியத்தை தீட்டியுள்ளான். அவன்தான் அழகு மிளிரும் இந்த கலைப்படைப்புகளை உருவாக்குகின்றான். இவையணைத்தையும் மனித வாழ்வின் பிரத்யேகமான ஒரு குறிக்கோளுக்காகவே படைக்கின்றான். அவனது இந்த ஆற்றல்தான் அனைத்து ஆற்றல்களிலும் வலிமை மிக்க ஆற்றலாகும். இந்தக் கலைஞன்தான் கலைஞர்களிலெல்லாம் மிகப்பெரிய கலைஞன் ஆவான். உண்மையான இறை நம்பிக்கையாளர்களும் ஆழ்ந்த சிந்தனைத் திறனுடையவர்களும் இந்தக்கலைஞனை அடையாளம் கண்டுக்கொள்கிறார்கள். அவனை அல்லாஹ் அல்லது இறைவன் என்று அழைக்கிறார்கள். அவன் மனிதனல்லன். ஏனெனில் எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை உருவாக்கிடவோ படைத்திடவோ முடியாது. அவன் விலங்குமல்லன்ரூபவ் தாவரமும் அல்லன் ரூபவ் அவன் பக்தியுடன் வணங்கப்படும் சிலையுமல்லன்ரூபவ் ஒரு வகை சிற்பமும் அல்லன். ஏனெனில் இவற்றில் எதுவுமே தம்மைத்தாமே உருவாக்கிக் கொள்ளவோ பிறவற்றை படைத்திடவோ முடியாது அவன் ஓர் எந்திரமும் அல்லன்ரூபவ் அவன் சூரியனும் அல்லன்ரூபவ் சந்திரனும் அல்லன்ரூபவ் நட்சத்திரமும் அல்லன் ஏனெனில் இவை அனைத்துமே பெரியதொரு நிர்வாக அமைப்பினால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. அவையெல்லாமே ஒருவனால் படைக்கப்பட்டவையாய் இருக்கின்றன. அவன் இவையனைத்தையும் விட வேறுபட்டவன். ஏனெனில் அவன்தான் இவையனைத்தையும் படைத்தவனும் பாதுகாத்து வருபவனும் ஆவான். ஒரு பொருளைப் படைப்பவன் அந்தப் பொருளை விட உயர்ந்தவனாகவும் அதனைவிட்டு வேறுபட்டவனாகவும்தான் இருக்க வேண்டும். எந்த ஒரு பொருளும் தானாகவே தோன்றிட முடியாது என்பதையும் இந்த அதிசயமான உலகம் தன்னைத்தானே படைத்துக்கொள்ளவுமில்லை திடீரென்று சுயமாகத் தோன்றிடவுமில்லை என்பதையும் நாம் அறிவோம். இந்த உலகில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாற்றங்களே அது படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் படைக்கப்படுகின்ற பொருள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகை படைப்பாளன் இருந்தேயாக வேண்டும் என்பதையும் நிரூயஅp;பிக்கின்றன. இந்த உலகைப் படைத்தவன் பாதுகாத்துக் கொண்டிருப்பவன் என்பனவும் ஒருவனையே குறிக்கின்றன இப்பங்கிடும் ஆற்றல் இயற்கையில் மிளிரும் ஆக்ககரமான சக்தி ஆகிய அனைத்துமே அவன் ஒருவனைத்தாhன் குறிக்கின்றன. அவன்தான் அல்லாஹ் அல்லது இறைவன் என்று அழைக்கப்படுகின்றான். அந்த சக்திதான் எல்லா இரகசியங்களுக்கும் தலையான இரகசியமாகும். அவன்தான் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தையும் விட உயர்ந்தவன் ஆவான். இறைவனின் உண்மை வேதமான திருக்குர்ஆன் பின் வரும் கருத்துகளை அறிவுறுத்துகிறது. இறைவன் மீதும் அவனது வல்லமையின் மீதும் நம்பிக்கைக் கொள்வதே மனித சமுதாயத்திற்கு வாழ்வின் பல புதிரான விஷயங்களுக்கு மிகச்சிறந்த சாத்தியமான விளக்கத்தை அளித்திட முடியும். அது ஒன்றே உண்மை அறிவைப்பெற்றிடவும் ஆன்மீக ஞானத்தை அடைந்திடவும் பாதுகாப்பான வழியாகும். இதுவே நன்னடத்தைக்கும் ஆரோக்யமான உறுதி வாய்ந்த ஒழுக்கத்திற்கும் இட்டுச்செல்லும் பாதையாகும் மகிழ்ச்சிக்கும் செல்வச் செழிப்புக்கும் நிச்சயமான முறையில் வழிகாட்டக் கூடியதாகும். இறைவன் இருப்பதாக மனிதன் ஏற்றுக் கொண்டபின் அவன் இறைவனின் பண்புகளையும் பெயர்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாகக் கூறினால் ஒவ்வொரு முழுமையான குணமும் ஒவ்வொரு நிறையும் முழுக்க முழுக்க நன்மையாக விளங்கிடும். ஒவ்வொரு விஷயமும் அவனுக்கே உரியதாகும் அவன் எந்தக்குறைபாடும் களங்கமும் மாசும் இல்லாதவன் ஆவான். குறிப்பாக ஒரு மனிதன் பின் வரும் விஷயங்களை அறிந்து அதனை நம்பிட வேண்டும்.  


1. இறைவன் ஒருவனே அவனுக்கு இணைரூபவ் துணை யாருமில்லை அவனுக்குக் குழந்தைகளுமில்லை அவன் எவரையும் பெற்றெடுப்பதுமில்லை அவன் எவருக்கும் பிறக்கவுமில்லை. அனைவரும் தமது தேவைகளுக்காக அவனை எப்போதும் அணுகிய வண்ணம் இருப்பார்கள். அவனுக்கு ஆதியோரூபவ் அந்தமோ இல்லை. அவனுக்கு நிகரானவர் எவருமில்லை (திருமறை குர்ஆன் 112: 1-5 ) 


2. அவன் கருணையாளன்ரூபவ் பரிவிரக்கமுடையவன் பாதுகாவலன் பொறுப்பாளன் உண்மையான வழிகாட்டி நீதிவான் மிக உயர்ந்த அதிபதி படைப்பாளன் கண்காணிப்பவன் முதலும் முடிவுமானவன் அனைத்;தும் அறிந்தவன் நுண்ணறிவாளன் அனைத்தும் செவிமடுப்பவன் அனைத்தையும் அறிபவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பவன் புகழ்வுடையவன் சர்வ வல்லமை படைத்தவன் ஆற்றலாளன் வலிமையுடையவன் ( திருமறை குர்ஆன் 57 : 1-6ரூபவ் 59 : 22-24) 


3. அவனே நேசிப்பவன் உணவளிப்பவன் தயாள குணமுடையவன் பரந்த உள்ளமுடையவன் வற்றாத செல்வமுடையவன் தன்னிறைவுடையவன் எவரையும் சார்ந்திராதவன் சுதந்திரமானவன் மன்னிப்பவன் சாந்தமும் இரக்கமும் உடையவன் பொறுமையானவன் மதிப்புணர்ந்தவன் தன்னைப்போன்று எவரும் இல்லாதவன் தனித்தன்மையுடையவன் பாதுகாப்பளிப்பவன் காப்பாற்றுபவன் நீதிபதிரூபவ் அமைதியே வடிவானவன் ( திருமறை குர்ஆன் 3 : 31ரூபவ் 11: 6ரூபவ் 35:15ரூபவ் 65: 2ரூபவ்3) இறைவனின் இந்தப்பெயர்கள் பண்புகள் ஒவ்வொன்றும் திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் எடுத்துறைக்கப் பட்டுள்ளன இறைவனின் கண்காணிப்பையும் பாதுகாவலையும் அவனது கருணையையும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அவன் தன் படைப்புகள் மீது மிகவும் அன்பும் நேசமும் உடையவன் ஆவான். அவன் நம் மீது பொழிந்துள்ள உபகரணங்களை நாம் எண்ணிட முயன்றால் நம்மால் அவற்றை எண்ணி முடிக்க முடியாது ஏனெனில் அவை ஏராளமானவை எண்ணிறைந்தவை. ( திருமறை குர்ஆன் 14:32-34ரூபவ் 16: 10-18) இறைவன் மிக உயர்ந்தவன் மேம்பாடுடையவன் மேலதிகாரம் கொண்டவன் ஆனால் அவன் இறையச்சமுள்ள சிந்திக்கும் மக்களுக்கு மிக நெருக்கமானவன் ஆவான். அவன் அவர்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான் தன்னை நேசிக்கும் மக்களை அவனும் நேசிக்கின்றான் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான் அவன் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றான் அறிவையும் வெற்றியையும் வழங்குகின்றான் வாழ்வையும் பாதுகாப்பையும் அளிக்கின்றான் தன்னுடன் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்க விரும்பும் அனைவரையும் அவன் வரவேற்கின்றான் அவர்களில் எவரையும் அவன் நிராகரிப்பதில்லை அவன் மனிதன் நல்லவனாயிருக்க வேண்டும் என்றும் நற்செயல் புரிந்து தீய செயலை விட்டு விலகி நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றான். அவன் மிக நல்லவனாகவும் அன்புடையவனாகவும் இருக்கின்ற காரணத்தால் அவன் நல்ல சரியான விஷயங்களையே பரிந்துரைக்கின்றான் அவற்றையே ஏற்கின்றான். வாய்மையுடன் அவனது ஆதரவையும் பாதுகாப்பையும் தேடுகின்ற எவராயினும் அவருக்கு அவனது கருணைக்கதவு எப்போதும் திறந்தே இருக்கின்றது. (திருக்குர்ஆன் 2:186 ரூபவ் 50:16 ) இறைவன் தன் படைப்புகள் மீது செலுத்தும் அன்பு அளவற்றது மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவன் நம்மீது பொழிந்திருக்கும் அருட்கொடைகளை நம்மால் எண்ணிடவோ அளவிடவோ முடியாது அவன் நம்மை படைக்கின்றான். நம்மீது தனிக்கவனம் செலுத்தி நம்மை பாதுகாக்கின்றான் நாம் பிறக்கின்ற நேரத்திலும் அதற்குப்பின்னாலும் மட்டுமல்லாமல் நாம் பிறப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்பிருந்தே நம்மைப் பாதுகாக்கும் பணியை அவன் செய்து வருகிறான்.படைப்புகளிலேயே மிகச்சிறந்த வடிவத்தில் அவன் நம்மை உருவாக்குகின்றான். நமது வளர்ச்சிக்குத் தேவையான எல்லாப்புலன்களையும் உறுப்புகளையும் நமக்கு அளிக்கிறான். நமக்கு நாமே உதவி செய்து கொள்ள நாம் இயலாதிருக்கும் நேரத்தில் அவன் நமக்கு உதவி செய்கிறான் அவன் நமக்கும் நம்மை சார்ந்திருப்பவர்களுக்கும் உணவு மற்றும் வாழ்வாதாரங்களை அளிக்கின்றான் அவன் மனிதனுக்குள் புரிந்துக் கொள்ளும் உள்ளத்தையும்ரூபவ் ஆன்மாவையும்ரூபவ் இறையச்சமுடையவர்களாகவும் நல்லவனாகவும் இருப்பதற்கான தன்னுணர்வையும் தோற்றுவிக்கின்றான் அன்பும் மனிதாபிமானமும் உடையவர்களாயிருப்பதற்குத் தேவையான உணர்வுகளையும் தோற்றுவிக்கின்றான். அவனது கருணையினால்தான் நாம் உண்மையான அறிவைப்பெறுகிறோம் உண்மையான வெளிச்சத்தைப் பார்க்கின்றோம் அவன் கருணையாளனாக இருக்கின்ற காரணத்தால் அவன் நம்மை அழகிய வடிவத்தில் படைக்கின்றான். மேலும் அவன் நமக்கு சூரியனையும் சந்திரனையும் தருகின்றான். இவையணைத்தும் இன்னும் பலவற்றையும் நமது நன்மைக்காகவும் நமது உபயோகத்திற்காகவும் படைத்தவன் அவனேயாவான். இந்த உலகில் நமக்கு ஊழியம் புரிகின்ற பொருள்களை அவனே படைக்கின்றான். மனிதனுக்கு கண்ணியத்தையும் மதிப்பையும் மரியாதையையும் அறிவாற்றலையும் அளிக்கின்றான்;. ஏனெனில் மனிதன் படைப்பினங்களிலேயே மிகச்சிறந்தவனும் பூமியில் இறைவனின் பிரதிநிதியும் ஆவான். இறைவனின் கருணை நமக்கு நம்பிக்கையையும் அமைதியையும் அளிக்கின்றது. தைரியத்தையும் தெம்பையும் அளிக்கின்றது. நமது கவலைகளுக்கும் துக்கங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் வழிவகையும் உடையவர்களாய் நம்மை ஆக்குகின்றது. நமக்கு நேரிடும் தொல்லைகளையும் இடையூறுகளையும் வெற்றி கொண்டிடவும் வெற்றியையும் மகிழ்வையும் பெற்றிடவும் சக்தியளிக்கின்றது. உண்மையில் இறைவனின் கருணை துயருற்றவர்களுக்கு நிவாரணமளிக்கின்றது. இன்னலுற்றவர்களுக்கு அவர்களின் துன்பம் நீக்கி உற்சாகமளிக்கின்றது. நோயுற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கின்றது.தேவையுடையோர்க்கு வாழ்க்கை வசதிகளை அளிக்கின்றது. சுருங்கக்கூறின் நமது வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் எல்லா நேரங்களிலும் எங்கும் இறை கருணை துணை போய்க் கொண்டிருக்கிறது. சிலர் இதனை ஏற்க மறுத்து விடுகிறார்கள். ஏனெனில் அவர்கள் இதனை அவ்வளவு முக்கியமானதாகக் கருதுவதில்லை. ஆனால் அது ஓர் எதார்த்த உண்மையாகும். அதனைநமது உள்ளத்தால் நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்பாளனும் கருனையாளனுமான இறைவன் நம்மை எப்போதும் மறப்பதில்லை. அல்லது நம்மை வீழ்ச்சி அடைய விடுவதுமில்லை. அவனை நாம் அழைக்கும் போது அந்த அழைப்புகளை வேண்டுதல்களை பிரார்த்தனைகளை அலட்சியப்படுத்துவதில்லை. தனது கருணையினாலும் அன்பினாலும்தான் அவன் நமக்கு நேர் வழியைக் காட்டி இருக்கிறான். திருத்தூதர்களையும் போதகர்களையும் நூல்களையும் வேத வெளிப்பாடுகளையும் நமக்கு அனுப்பியிருக்கின்றான். நமக்கு உதவி புரிந்திடவும் நேர்வழி காட்டிடவும்தான் இவையணைத்தையும் செய்திருக்கின்றான். இறைவனிடமிருந்து வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள் இறைமறைகளில் தற்போதுள்ளவற்றில் மிக நம்பகமான வேதம் திருக்குர்ஆனேயாகும். நபி மொழிகள் வாயிலாகவும் குர்ஆனின் வழி அறிவுறைகள் வாயிலாகவும் நாம் மன்னிக்கும் பண்புடைய இறைவனைப்பற்றி தெரிந்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு மனிதன் பாவம் ஒன்றைச் செய்துவிட்டால் அல்லது குற்றம் எதனையாவது புரிந்து விட்டால் அவன் இறைவனின் கட்டளையை மீறியவன் ஆவான். இறைவனுக்கு எதிராக கொடுங்குற்றத்தை புரிந்தவன் ஆவான். தன் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தியவன் ஆவான். ஆனால் அவன் உண்மையிலேயே மன்னிப்புக்கோர விரும்பி தன் தவறான செயல்களுக்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வர விரும்பினால் இறைவனின் மன்னிப்பை வாய்மையுடன் கோரி நேர்மையான முறையில் அவனை அனுகிட விரும்பினால். இறைவன் நிச்சயம் அவனை ஏற்றுக் கொண்டு மன்னிக்கின்றான் இறைவனையும் அவனது ஏகத்துவத்தையும் நிராகரிப்பவர்கள் தமது தவறான கருத்தையுணர்ந்து மனம் திருந்தி இறைவனின் பக்கம் திரும்பி வரத் தீர்மானித்தால் அவர்களுக்குக் கூட மன்னிப்பு உண்டு என்று உறுதியளிக்கப்பட்டிருக்கின்றது இது தொடர்பாக திருக்குர்ஆன் கூறுகின்றது: 'திண்ணமாக இறைவன் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிப்பதில்லை ஆனால் அவன் நாடுவோருக்கு அது தவிர உள்ள பிறவற்றை (பிற தீய செயல்களை) மன்னித்து விடுகின்றான். இறைவனுடன் பிறரை இணை சேர்ப்பவன் பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டான் பெரும் பாவம் புரிந்து விட்டான் (திருமறைக் குர்ஆன் 4:48ரூபவ் 116) (நபியே) நீர் கூறுவீராக வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட என் அடியார்களே அல்லாஹ்வின் கருணையை விட்டு நிராசையாகி விடாதீர்கள் இறைவனின் கருணையைவிட்டு நம்பிக்கையிழந்து விடாதீர்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுகிறான் . ஏனெனில் அவன் மிக மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கின்றான். உங்கள் இறைவனின் பக்கமே ( பாவ மன்னிப்புக் கோரி) திரும்புங்கள். வேதனை உங்களுக்கு வந்து விடும் முன்பாகவே அவனுக்கு கீழ் படியுங்கள். வேதனை வந்து விட்ட பிறகு உங்களுக்கு எவரும் உதவி புரிய மாட்டார்கள் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கியருளப்பட்;ட திருமறையின் மிகச்சிறந்த அம்சத்தை பின் பற்றுங்கள் நீங்கள் சற்றும் உணராதிருக்கும் நிலையில் உங்கள் மீது திடீரென்று வேதனை இறங்குவதற்கு முன்னால் அதனைப் பின் பற்றுங்கள் (திருக்குர்ஆன் 39: 53ரூபவ்55) தனது இந்த பேருபகாரங்களுக்கும் அன்புக்கும் பகரமாக இறைவன் நம்மிடமிருந்து எதனையும் வேண்டுவதில்லை ஏனெனில் அவன் தேவைகளற்றவன். எதனையும் சார்ந்திராதவன் தனது அருட்கொடைகளுக்காக நாம் அவனுக்கு விலையேதும் தரவேண்டும் என்று அவன் கேட்பதில்லை ஏனெனில் நாம் அவனுக்கு சன்மானம் அளித்திடவோ அவனது அளவிட இயலாத உதவிகளையும் கருணையையும் மதிப்பிட்டு முடித்து விடவோ நம்மால் இயலாத ஒன்று அவன் நமக்கு கட்டளை இடுவதெல்லாம் இவைதாம். நீங்கள் நல்லவர்களாக வாழ்ந்திட வேண்டும் நன்றியுணர்வுள்ளவர்களாளவும் மதிப்புணரக் கூடியவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும். அவனது பரிந்துரைகளைப் பின் பற்றி அவனது சட்டங்களை செயல் படுத்திட வேண்டும். நன்மைக்கும் மேலான நற்பண்புகளுக்கும் சரியான முன் மாதிரியாக விளங்கிட வேண்டும். பூமியில் அவனது நேர்மையான பிரதிநிதிகளாகவும் உண்மையான பொறுப்பாளர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதுதான். அவன் நம்மை அடிமைப்படுத்திட விரும்பவில்லை. ஏனெனில் நம்மைப் படைத்து மற்ற படைப்புகள் அனைத்தையும் விட நமது அந்தஸ்தை உயர்த்துபவன் அவனே ஆகவே அவன் நமக்கு அளிக்கின்ற சட்டங்களும் அறிவுரைகளும் நமது நன்மைக்காகவும் நலனுக்காகவும்தான் அளிக்கப்படுகின்றன. நமது உலக வாழ்க்கையை ஒருவரோடொருவர் அமைதியான முறையில் அன்பு வழியில் சகோதரத்துவப் பாதையில் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் அனுபவித்திட நமக்கு உதவிடுவதற்காகவே அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை நாம் இறைவனின் மகிழ்ச்சிகரமான நட்பைப் பெற்றுக் கொள்ளச் செய்திட வேண்டும் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்வில் நிரந்தர மகிழ்வை அடைந்திட தேவையான மிக நிச்சயமான ஓர் அனுகுமுறையை நாம் மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்னும் குறிக்கோளுடன் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதனையறிந்து கொள்ள பல் வேறுபட்ட வழிகள் உள்ளன. அவனைப்பற்றிக் கூறுவதற்கும் பல விஷயங்கள் உள்ளன. இந்த உலகில் காணப்படும் மனங்கவரும் அற்புதப் படைப்புகளும் பேரதிசயமான பொருள்களும் அல்லாஹ்வைப்பற்றி எடுத்துரைக்கும் சிறந்த புத்தகங்களைப் போல் விளங்குகின்றன. அவற்றில் இறைவனைப்பற்றி நம்மால் பல விஷயங்களைப் படித்து அறிந்திட முடியும். ஆகவே இயற்கையைக் குறித்து சிந்திப்பதன் வாயிலாகவும் இறைத்தூதர்களின் சொற்களைக் கேட்பதாலும் வேத வெளிப்பாடுகளைப் படிப்பதாலும் இறைவனைக் குறித்து நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்தும் அறிவை நாம் பெற்றிட முடியும். அவனை அடைவதற்கான நேரான பாதையைக் காண முடியும். மேற் சொன்ன விவாதங்கள் பின் வரும் உண்மைகளை நம் முன் சமர்ப்பிக்கின்றன. இறைவன் இருக்கின்றான் அவன் ஒருவனே இந்தப் பேரண்டத்தைப் படைத்தவன். அதற்கு வாழ்வாதாரத்தை அளித்து அதனைப் பாதுகாப்பவன். அதிலுள்ள உயிரினங்களுக்குத் தேவையானவற்றை அளித்து அதனைப்பாதுகாப்பவன். வாரி வழங்குபவன் அவனே அவனது இறைமையில் பங்குதாரர்களோ அவனுக்கு இணையானவர்களோ எவருமில்லை. அவன் ஒருவனே நமது வாழ்வின் எல்லாத்துறைகளிலும் நமக்கு வழிகாட்ட முடியும் அவனுடைய வழி காட்டுதலைப் பின் பற்றுவதில் தான் இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு அவனது பிரச்னைகளுக்குறிய தீர்வும் வெற்றியும் அடங்கியுள்ளது. திருக்குர்ஆன் கூறுகிறது: 'தன்னைத்தவிர வணக்கத்திற்குறிய இறைவன் வேறொருவருமில்லை என்று அல்லாஹ்வே சாட்சியமளிக்கின்றான் வானவர்களும் அறிவுடையோர் அனைவரும் ' அந்த வல்லமை மிக்கவனை - மிகைத்தவனை - நுன்னறிவாளனைத் தவிர உண்மையில் இறைவன் எவனுமில்லை ' என்று சாட்சியமளிக்கின்றார்கள்'. (திரு மறை குர்ஆன் 3: 18) '( நபியே நீர் ) கூறுவீராக உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதல் ஆகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ் படியும் படி நாங்கள் கட்டளையிடப்பட்டுள்ளோம்.' (திரு மறை குர்ஆன் 6;:71)



இனி இறைவனை ஏற்றுக் கொள்வதும் அவனது வழிகாட்டுதலைப் பற்றிய அறிவைத் தேடிப் பெறுவதும். அவனது வழிகாட்டுதலுக்கு முற்றிலுமாகக் கீழ் படிந்து வாழ்வதும் நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்



In this lecture Abdur-raheem addresses the age-old question, "Does God Exist ?" The lectures begins by defining what a God is and continues to explore why it is common sense to believe in a Creator. He then brings forth the evidences from the Muslim Holy Scripture, The Quran, to detail the existence of the one true God.